சிறிலங்கா நாடாளுமன்றில் தேசிய சபை தொடர்பில் சபாநாயகர் விடுத்துள்ள அறிவிப்பு! நேரலை
சிறிலங்கா நாடாளுமன்ற அமர்வில் தேசிய சபை நியமனங்கள் தொடர்பில் வபாநாயகரால் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இன்று இடம்பெறும் நாடாளுமன்ற அமர்விலேயே சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன இந்த அறிவித்தலை வெளியிட்டார்.
கடந்த 20ஆம் திகதி நாடாளுமன்ற அங்கீகாரத்தை பெற்ற தேசியசபையின் நியமனங்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சபாநாயகர் தேசிய சபையின் தலைவராக செயற்படுவார் அத்துடன் பிரதமர், அவைத்தலைவர், எதிர்கட்சி தலைவர், அரசாங்கக்கட்சியின் பிரதம அமைப்பாளர், ஆகியோருடன் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த தேசியசபையில் செயற்படுவார்கள் என்று சபாநாயகர் அறிவித்துள்ளார்.
இந்த சபையில், டக்ளஸ் தேவானந்தா, நஸீர் அஹமட், சிசிர ஜெயகொடி ஜோன்ஸ்ட்ன் பெர்ணான்டோ, டிரான் அலஸ், சிவநேசத்துரை சந்திரகாந்தன், பவித்ரா வன்னியாராச்சி, வஜிர அபேவர்த்தன, ஏ.எல்.எம் அத்தாவுல்லாஹ், திஸ்ஸ விதாரன, ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன், விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, பழனி திகாம்பரம், மனோ கணேசன், ரோஹித்த அபேகுணவர்த்தன, நாமல் ராஜபக்ச, அலி சப்ரி ரஹீம், ஜீவன் தொண்டமான், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அத்துரலியே ரத்தன தேரர், அசங்க நவரட்ன, சி.வி விக்னேஸ்வரன் மற்றும் சாகர காரியவசம் ஆகியோர் செயற்படுவார்கள் என்று சபாநாயகர் அறிவித்துள்ளார்.
