அங்கீகாரம் வழங்கப்படாத இலங்கையின் உயரமான மனிதன்

Mullaitivu Sri Lanka Tamil
By Shadhu Shanker Jun 12, 2024 07:45 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in சமூகம்
Report

இலங்கையின்(Sri lanka) உயரமான மனிதன் என்று அழைக்கப்படும் குணசிங்கம் கசேந்திரன் இதுவரை எந்த அங்கீகாரமும் தனக்கு கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

இவர், முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்தின் 1ம் வட்டாரம் கைவேலியில் தற்போது வசித்து வருகின்றார். இவரை எல்லோரும் இலங்கையின் உயரமான மனிதன் என்று அழைக்கின்றார்கள்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 2009 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச காலத்தில்தான் என்னை உயரமானவர் என்று அங்கீரித்தார்கள். புனர்வாழ்வு பெறும் போது அவர்தான் அதிபர் புனர்வாழ்விற்கு பின்னர் மகிந்த ராஜபக்ச ஆட்சியின் பின்னர் மைத்திரி, பிறகு கோட்டாபய, இப்போது ரணில் வந்தார் எந்த அங்கீகாரமும் இல்லை.

மதரீதியாக பிரச்சனையை தூண்டுவதற்கு முயற்சி: குற்றஞ்சாட்டும் சாணக்கியன்

மதரீதியாக பிரச்சனையை தூண்டுவதற்கு முயற்சி: குற்றஞ்சாட்டும் சாணக்கியன்

உயரமானமனிதர்

இலங்கையில் உயரமான மனிதர் என்று என்னை பேட்டி எடுக்கின்றார்கள். கிராம சேவையாளராலோ அல்லது பிரதேச செயலகத்தினாலோ எனக்கான அங்கீகாரம் தரவில்லை.

அங்கீகாரம் வழங்கப்படாத இலங்கையின் உயரமான மனிதன் | Sri Lankan Tallest Man

இலங்கையில் இதற்கான பதிவும் இல்லை, என்னை அங்கீகரியுங்கள் என்று நான் கோரவில்லை என்று தெரிவித்த அவர் தனக்கு முதன்முதல் அங்கீகாரம் கிடைத்தமையினை பற்றியும் தெரிவித்துள்ளார்.

முதன்முதல் புனர்வாழ்வில் இருந்து மருத்துவ பரிசோதனைக்காக கொழும்பு லங்கா மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோதுஅப்போதுதான் என்னை பரிசோதித்து என்னை அந்த மருத்துவர் எனது மருத்துவ அட்டையில் 7அடி 2அங்குலம் உயரம் என்று எழுதி இலங்கையில் உயரமான மனிதராக இவர்தான் இருக்கலாம் என்று சொல்லி எழுதி தந்தார். அவர் சொன்னார் எனக்கான போசாக்கு வசதிகள் சகலதும் செய்துகொடுக்கவேண்டும் என்று கூறினார்.

யாழில் டிப்பர் வாகனம் மோதி இளம் குடும்பஸ்தர் பலி

யாழில் டிப்பர் வாகனம் மோதி இளம் குடும்பஸ்தர் பலி

அங்கீகரிக்கப்படாத நிலை

அதன் பின்னர் புனர்வாழ்வு பெற்று விடுதலையாகும் நிலையில் வெலிக்கடை சிறைச்சாலையில் 6000 பேருக்குள் என்னை முதன்மைப்படுத்தி கவனித்த அதிகாரிகள் என்னை நன்றாக கவனித்தார்கள் படுக்கை, உணவு வசதிகள் என அனைத்தும் ஏற்படுத்தியுள்ளார்கள்.

அங்கீகாரம் வழங்கப்படாத இலங்கையின் உயரமான மனிதன் | Sri Lankan Tallest Man

ஆனால் இப்போது தனது வாழ்வாதாரத்திற்காக முச்சக்கரவண்டியில் பாடசாலை மாணவர்களை ஏற்றி இறக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றார். புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள கிராமங்களில் உள்ள பாடசாலை மாணவர்களை பாடசாலைக்கு ஏற்றி இறக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றார் இதுதான் இவரது வாழ்வாதாரமாக காணப்படுகின்றது.

எனது இரண்டு கால்களால்தான் நான் எல்லாத்தையும் இழந்து வருகின்றேன். அரசாங்கத்தினால் ஊனம் உற்ற பணம் என்று மாதம் தோறும் 5 ஆயிரம் ரூபா கொடுக்கின்றார்கள். எனது கால் காயப்பட்ட கால் இதனால் நிற்கமுடியாது, ஊனம் வடிகின்றது. இரண்டு கால்களாலும்தான் எனது வாழ்கையில் எல்லாத்தினையும் இழந்துகொண்டு வருகின்றேன்.

கைவிடப்பட்ட இலங்கை - நேபாளம் அணிகளுக்கு இடையிலான போட்டி

கைவிடப்பட்ட இலங்கை - நேபாளம் அணிகளுக்கு இடையிலான போட்டி

தமிழன்  என்ற காரணம்

எனது மனைவி என்னை விட்டு பிரிந்த நிலையில் நான் இரண்டு பிள்ளைகளையும் வைத்து வளர்த்து வருகின்றேன். இப்போது எனது காலில் ஏற்பட்ட காயத்தினை மாற்றவேண்டும் எனது தொழிலை பலப்படுத்தவேண்டும் எனது பிள்ளைகளை வளர்க்க வேண்டும்.

அங்கீகாரம் வழங்கப்படாத இலங்கையின் உயரமான மனிதன் | Sri Lankan Tallest Man

இலங்கையில் நான் உயரமான மனிதன் என ஊடகங்களால் அறிவிக்கப்பட்ட பின்னர் நான்கு அரசாங்கங்கள் மாறி மாறி வந்துள்ளன. ஆனால் யாரும் எனங்கான அங்கீகாரத்தினை தந்ததில்லை. எனது சுய உழைப்பில்தான் இயங்கிக்கொண்டு ஒரு பேசும் பொருளாகவே இருக்கின்றேன்.

என்னை உயரமனிதன் என்று ஊடகங்கள் அறிவித்த பின்னர் என்னை சிங்கள மக்கள் வந்து வந்து படம் எடுத்தார்கள் எனக்கு ஓய்வில்லை தமிழ் மக்கள் என்னை உயரமனிதன் என்று அறிந்து கொண்டார்கள் என குறிப்பிட்டார்.

இவ்வாறு இலங்கையின் உயரமனிதனாக தமிழன் ஒருவர் காணப்படுகின்றார் என்ற காரணத்திலா அவருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதிபர் தேர்தல் முடிவுகள் குறித்து ரணில் வெளியிட்டுள்ள கருத்து

அதிபர் தேர்தல் முடிவுகள் குறித்து ரணில் வெளியிட்டுள்ள கருத்து

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026