மீண்டும் ஆயுதம் தூக்கவேண்டிய நிலை வரும் - கொதித்தெழுந்த முதியவர் (காணொளி)
மீண்டும் ஆயுதம் தூக்கவேண்டிய நிலை வரும் என நெடுங்கேணியில் முதியவர் ஒருவர் கொதித்தெழுந்துள்ளார்.
கௌரவமான உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் எனும் தொனிப்பொருளில் வடகிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் அனுசரணையோடு நீதிக்கான மக்கள் அமைப்பினால் நெடுங்கேணி கந்தசாமி ஆலய முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (24) முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே குறித்த முதியவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“நாங்கள் இந்த மண்ணிலே ஏன் பிறந்தோம் என்று தான் சிந்திக்க தோன்றுகின்றது. பட்டதாரிகள் மாணவர்கள் உரிமைக்காக போராடிய போது பயங்கரவாத சட்டம் என்று கூறி கைது செய்கிறார்கள்.
ரணில் விக்ரமசிங்கவிற்கு நாடாளுமன்றத்திற்கு செல்வதற்கு ஒரு ஆசனம் கூட இல்லை. அவர் எங்களுக்கு ஆட்சி புரிவதென்றால் எவ்வாறு.
இது பாரத பரம்பரை, இது வன்னிமண்” என்றார்.

