சிறிலங்கன் எயார்லைன்ஸுக்கு மேலும் இரு புதிய விமானங்கள்!
சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம், தனது விமானங்களின் எண்ணிக்கையை 25 ஆக உயர்த்தும் வகையில் மேலும் இரண்டு அகலமான உடல் விமானங்களை வாங்கும் திட்டத்தை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள வழித்தடங்களில் செயல்பாடுகளின் அதிர்வெண்ணை அதிகரிக்கும் முயற்சியாக இந்த ஆண்டு இறுதிக்குள் குறித்த விமானங்கள் வாங்கப்படவுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
திட்டத்தில் தடை
அண்மையில், சிறிலங்கன் எயார்லைன்ஸ், தனது விமான அணியில், ஒரு புதிய விமான எயார்பஸ் A330-200 விமானத்தை குத்தகைக்கு சேர்த்தது, இது ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு விமான நிறுவனத்தில் இணைந்த முதல் விமானமாகும்.
இந்த நிலையில், மேலும் இரண்டு விமானங்களுக்கு தனது அலுவலகம் கணக்கிட்டுள்ளதாகவும் ஆனால் உலக சந்தையில் அவை போதுமான எண்ணிக்கையில் கிடைக்காதது விமானக் குழுவை அதிகரிக்கும் திட்டங்களுக்குத் தடையாக இருப்பதாகவும் விமான நிறுவனத்தின் தலைவர் சரத் கணேகொட தெரிவித்துள்ளார்.
இதன்படி, விமானங்களை வாங்கும் சந்தர்ப்பம் கிட்டினால், ஜெர்மனியின் பிராங்பேர்ட் போன்ற சில ஐரோப்பிய இடங்களுக்கான அதிர்வெண் அதிகரிக்கும் எனவும் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக சீனாவின் பெய்ஜிங்கிற்கு மீண்டும் விமானச் சேவைகளைத் தொடங்குவது குறித்து விமான நிறுவனம் பரிசீலிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அநுர நிர்வாகத்தின் திட்டம்
முந்தைய அரசாங்கம், அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை மறுசீரமைக்கும் திட்டத்தின் கீழ், பண நெருக்கடியில் சிக்கித் தவித்த சிறிலங்கன் விமான நிறுவனத்தை விற்க திட்டமிட்டது.
எனினும், தற்போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கம், விமான நிறுவனத்தை தனியார்மயமாக்குவதற்குப் பதிலாக அதன் வளர்ச்சிக்கு வேறுபட்ட திட்டத்தைக் கொண்டுள்ளதாக தெரிகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
