இராஜாங்க அமைச்சர் மீது தலைக்கவசத்தால் தாக்குதல்
Sri Lanka Police
Sri Lanka Politician
Sri Lanka Police Investigation
By Sumithiran
தலைக்கவசத்தால் தாக்குதல்
ஆரம்பக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க மீது தலைக்கவசத்தால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
நேற்று (19) மாலை பதுளை பண்டாரநாயக்க மாவத்தையில் வைத்து இருவர் இந்த தாக்குதலை நடத்தியதாக அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

உரையாடிக்கொண்டிருந்தவேளை சம்பவம்
பதுளை உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் ஒருவரின் கடைக்கு அருகில் அமைச்சர் தனது காரை நிறுத்தி உரையாடிக் கொண்டிருந்த போதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தாக்குதலில் அமைச்சருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அப்போது, இரண்டாவது தாக்குதலை தடுக்க அமைச்சர்களின் பாதுகாப்பு அதிகாரிகள் குறைந்தபட்ச பலத்தை பயன்படுத்தியுள்ளனர்.

இராஜாங்க அமைச்சரை தாக்கிய சம்பவம் தொடர்பில் காவல்துறைியனரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி