பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவி மாயம்!! உதவிகோரும் பெற்றோர்
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாத்தறை - வெலிகம பிரதேசத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளதாக வெலிகம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வெலிகம சுமங்கலா பாலிகா வித்தியாலயத்தில் 11ஆம் ஆண்டு கல்வி கற்கும் ஜனிஷா இமய காவிந்தி என்ற 16 வயதுடைய மாணவியே காணாமல் போயுள்ளார்.
கடந்த 3ஆம் திகதி முதல் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவி காணாமல் போயுள்ளதாக வெலிகம காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் காணாமல் போன மாணவியின் தந்தை கருத்து தெரிவிக்கையில்,
“எனது மகளை 3ஆம் திகதி முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் மகள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
மகள் இம்முறை க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்தாள். இன்று க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதும் மற்ற மாணவர்களைக் கண்டால் எனக்கு கவலையாக இருக்கின்றது.
எனது மகள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் வெலிகம காவல்துறையினருக்கோ அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்திற்கோ தகவல் தெரிவிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.