தன் மீது திட்டமிட்டு அவதூறு பரப்பப்படுவதாக விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு

Sri Lanka Politician C. V. Vigneswaran Election Current Political Scenario
By Shalini Balachandran Aug 05, 2024 03:07 AM GMT
Report

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பது தொடர்பில் தான் தெரிவித்திருந்த கருத்துக்கள் பற்றி தவறான பிரச்சாரங்கள் செய்யப்படுவதாக  தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் (C. V. Vigneswaran) குற்றஞ்சாட்டியுள்ளார்.

குறித்த விடயத்தை ஊடகஙகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் பொது வேட்பாளருக்கே தமிழ் மக்கள் தமது முதல் வாக்கிளை அளிக்க வேண்டும் அத்தோடு  இரண்டாம் மற்றும் மூன்றாம் விருப்பு வாக்குகளைப் பயன்படுத்துவது தமிழ் மக்களின் ஜனநாயக உரிமை இன்னாருக்கு அதனை அளியுங்கள் என்று எந்தத் தருணத்திலும் நான் கூறவில்லை அத்தோடு கூறமாட்டேன்.

தபால் மூல வாக்கெடுப்பிற்கான விண்ணப்பங்கள் : வெளியான முக்கிய அறிவிப்பு

தபால் மூல வாக்கெடுப்பிற்கான விண்ணப்பங்கள் : வெளியான முக்கிய அறிவிப்பு

பொது வேட்பாளர்

தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூகங்கள் ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தும் போது ஒட்டு மொத்த தமிழ் மக்களும் அந்த வேட்பாளருக்குே தமது வாக்குகளை அளிக்க வேண்டும் என்பதே எனது கோரிக்கை.

தன் மீது திட்டமிட்டு அவதூறு பரப்பப்படுவதாக விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு | Tamil Common Candidates In Presidential Elections

விருப்பு வாக்கினை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைக்கு உட்பட்ட விடயம் இது தொடர்பில் அவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும் இன்னாருக்கு தான் தமிழ் மக்கள் தமது விருப்பு வாக்கிளை அளிக்க வேண்டும் என்று நான் எந்த கோரிக்கையினையோ அல்லது ஆலோசனையோ முன்வைக்கவில்லை.

பல கேள்விகள் பத்திரிகையாளர்களினால் முன்வைக்கப்படும் போது எமது அடிப்படை குறிக்கோள்களை நாங்கள் சிதைத்திருப்பதாக எனது பதில்களை திரித்து வெளியிடும் பழக்கம் சில ஊடக சகோதரர்களுக்கு உண்டு என்பதைக் காணமுடிகின்றது ஆனால் அவை என்னுடைய கருத்துக்கள் அன்று.

சொத்து பிரகடனங்களை வழங்கிய அரசியல்வாதிகள்

சொத்து பிரகடனங்களை வழங்கிய அரசியல்வாதிகள்

தேர்தலின் பின்விளைவு

நான் சில காலத்திற்கு முன்னர் தேர்தலைப் பிற்போட்டால் நாட்டுக்கு நன்மை பயக்கும் என்று கூறியது உண்மைதான் இப்பொழுதும் என்னுடைய அச்சம் இந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்விளைவுகள் எந்த ஒரு சிங்கள வேட்பாளரினாலும் ஐம்பது சதவிகித வாக்குகளைப் பெற முடியாமல் போகும் பட்சத்தில் நாட்டின் அரசியல் நிலை கவலைக்கிடமாகலாம்.

தன் மீது திட்டமிட்டு அவதூறு பரப்பப்படுவதாக விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு | Tamil Common Candidates In Presidential Elections

பல தீய சக்திகள் நாட்டில் குழப்ப நிலையினை ஏற்படுத்த முனையலாம் இன்று சீனா தனது படையை இங்கு அனுப்ப இருப்பதாகச் செய்தி வந்துள்ளது இது சிறுபான்மையினருக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் அத்தோடு பொருளாதார நிலையை பெரிதாகப் பாதிக்கலாம் மேலும் நாட்டின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படலாம்.

அத்தோடு, வெளிநாட்டு ஊடுருவல்கள் நிலைமையை இன்னும் சீரற்றதாக்கலாம் இவற்றைக் கருத்தில் கொண்டே நான் தேர்தலைப் பிற்போட்டால் நாட்டிற்கு நல்லது என்றேன் அதே நேரத்தில் நாட்டின் நலன் கருதி மூன்று முக்கிய வேட்பாளர்களும் இதனை எவ்வாறு வழி நடத்துவது என்று கலந்தாலோசிக்கலாம் என்றும் கூறினேன்.

கப்பல்கள் மீதான தாக்குதலை மீண்டும் ஆரம்பித்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள்

கப்பல்கள் மீதான தாக்குதலை மீண்டும் ஆரம்பித்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள்

ஜனநாயக உரிமை

அவ்வாறு கூறியதை மனதில் வைத்துத்தான் சில ஊடகங்கள் நான் ஒரு குறிப்பிட்ட வேட்பாளருக்கு தமிழ் மக்கள் தமது இரண்டாவது விருப்பு வாக்கினை அளிக்க வேண்டும் என்று கூறியதாக தவறாக செய்தி வெளியிட்டிருக்கின்றார்கள்.

தன் மீது திட்டமிட்டு அவதூறு பரப்பப்படுவதாக விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு | Tamil Common Candidates In Presidential Elections

நாட்டின் நலன் கருதி நான் கூறியதற்கும் தமிழ் பொது வேட்பாளர் தெரிவில் எனது திடமான முடிவுக்கும் உறவமைத்து கூறியமை பத்திரிகையாளர்களின் ஊகமாகும்.

தமிழ் பொது வேட்பாளருக்கே தமிழ் மக்கள் தமது முதல் வாக்கிளை அளிக்க வேண்டும் அத்தோடு இரண்டாம் மற்றும் மூன்றாம் விருப்பு வாக்குகளைப் பயன்படுத்துவது தமிழ் மக்களின் ஜனநாயக உரிமை அத்தோடு இன்னாருக்கு அதனை அளியுங்கள் என்று எந்தத் தருணத்திலும் நான் கூறவில்லை மேலும் கூறமாட்டேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் வேலை இழந்த பெண்ணிற்கு அடித்த அதிஷ்டம்

அமெரிக்காவில் வேலை இழந்த பெண்ணிற்கு அடித்த அதிஷ்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025