தன் மீது திட்டமிட்டு அவதூறு பரப்பப்படுவதாக விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு

Sri Lanka Politician C. V. Vigneswaran Election Current Political Scenario
By Shalini Balachandran Aug 05, 2024 03:07 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in அரசியல்
Report

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பது தொடர்பில் தான் தெரிவித்திருந்த கருத்துக்கள் பற்றி தவறான பிரச்சாரங்கள் செய்யப்படுவதாக  தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் (C. V. Vigneswaran) குற்றஞ்சாட்டியுள்ளார்.

குறித்த விடயத்தை ஊடகஙகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் பொது வேட்பாளருக்கே தமிழ் மக்கள் தமது முதல் வாக்கிளை அளிக்க வேண்டும் அத்தோடு  இரண்டாம் மற்றும் மூன்றாம் விருப்பு வாக்குகளைப் பயன்படுத்துவது தமிழ் மக்களின் ஜனநாயக உரிமை இன்னாருக்கு அதனை அளியுங்கள் என்று எந்தத் தருணத்திலும் நான் கூறவில்லை அத்தோடு கூறமாட்டேன்.

தபால் மூல வாக்கெடுப்பிற்கான விண்ணப்பங்கள் : வெளியான முக்கிய அறிவிப்பு

தபால் மூல வாக்கெடுப்பிற்கான விண்ணப்பங்கள் : வெளியான முக்கிய அறிவிப்பு

பொது வேட்பாளர்

தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூகங்கள் ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தும் போது ஒட்டு மொத்த தமிழ் மக்களும் அந்த வேட்பாளருக்குே தமது வாக்குகளை அளிக்க வேண்டும் என்பதே எனது கோரிக்கை.

தன் மீது திட்டமிட்டு அவதூறு பரப்பப்படுவதாக விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு | Tamil Common Candidates In Presidential Elections

விருப்பு வாக்கினை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைக்கு உட்பட்ட விடயம் இது தொடர்பில் அவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும் இன்னாருக்கு தான் தமிழ் மக்கள் தமது விருப்பு வாக்கிளை அளிக்க வேண்டும் என்று நான் எந்த கோரிக்கையினையோ அல்லது ஆலோசனையோ முன்வைக்கவில்லை.

பல கேள்விகள் பத்திரிகையாளர்களினால் முன்வைக்கப்படும் போது எமது அடிப்படை குறிக்கோள்களை நாங்கள் சிதைத்திருப்பதாக எனது பதில்களை திரித்து வெளியிடும் பழக்கம் சில ஊடக சகோதரர்களுக்கு உண்டு என்பதைக் காணமுடிகின்றது ஆனால் அவை என்னுடைய கருத்துக்கள் அன்று.

சொத்து பிரகடனங்களை வழங்கிய அரசியல்வாதிகள்

சொத்து பிரகடனங்களை வழங்கிய அரசியல்வாதிகள்

தேர்தலின் பின்விளைவு

நான் சில காலத்திற்கு முன்னர் தேர்தலைப் பிற்போட்டால் நாட்டுக்கு நன்மை பயக்கும் என்று கூறியது உண்மைதான் இப்பொழுதும் என்னுடைய அச்சம் இந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்விளைவுகள் எந்த ஒரு சிங்கள வேட்பாளரினாலும் ஐம்பது சதவிகித வாக்குகளைப் பெற முடியாமல் போகும் பட்சத்தில் நாட்டின் அரசியல் நிலை கவலைக்கிடமாகலாம்.

தன் மீது திட்டமிட்டு அவதூறு பரப்பப்படுவதாக விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு | Tamil Common Candidates In Presidential Elections

பல தீய சக்திகள் நாட்டில் குழப்ப நிலையினை ஏற்படுத்த முனையலாம் இன்று சீனா தனது படையை இங்கு அனுப்ப இருப்பதாகச் செய்தி வந்துள்ளது இது சிறுபான்மையினருக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் அத்தோடு பொருளாதார நிலையை பெரிதாகப் பாதிக்கலாம் மேலும் நாட்டின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படலாம்.

அத்தோடு, வெளிநாட்டு ஊடுருவல்கள் நிலைமையை இன்னும் சீரற்றதாக்கலாம் இவற்றைக் கருத்தில் கொண்டே நான் தேர்தலைப் பிற்போட்டால் நாட்டிற்கு நல்லது என்றேன் அதே நேரத்தில் நாட்டின் நலன் கருதி மூன்று முக்கிய வேட்பாளர்களும் இதனை எவ்வாறு வழி நடத்துவது என்று கலந்தாலோசிக்கலாம் என்றும் கூறினேன்.

கப்பல்கள் மீதான தாக்குதலை மீண்டும் ஆரம்பித்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள்

கப்பல்கள் மீதான தாக்குதலை மீண்டும் ஆரம்பித்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள்

ஜனநாயக உரிமை

அவ்வாறு கூறியதை மனதில் வைத்துத்தான் சில ஊடகங்கள் நான் ஒரு குறிப்பிட்ட வேட்பாளருக்கு தமிழ் மக்கள் தமது இரண்டாவது விருப்பு வாக்கினை அளிக்க வேண்டும் என்று கூறியதாக தவறாக செய்தி வெளியிட்டிருக்கின்றார்கள்.

தன் மீது திட்டமிட்டு அவதூறு பரப்பப்படுவதாக விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு | Tamil Common Candidates In Presidential Elections

நாட்டின் நலன் கருதி நான் கூறியதற்கும் தமிழ் பொது வேட்பாளர் தெரிவில் எனது திடமான முடிவுக்கும் உறவமைத்து கூறியமை பத்திரிகையாளர்களின் ஊகமாகும்.

தமிழ் பொது வேட்பாளருக்கே தமிழ் மக்கள் தமது முதல் வாக்கிளை அளிக்க வேண்டும் அத்தோடு இரண்டாம் மற்றும் மூன்றாம் விருப்பு வாக்குகளைப் பயன்படுத்துவது தமிழ் மக்களின் ஜனநாயக உரிமை அத்தோடு இன்னாருக்கு அதனை அளியுங்கள் என்று எந்தத் தருணத்திலும் நான் கூறவில்லை மேலும் கூறமாட்டேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் வேலை இழந்த பெண்ணிற்கு அடித்த அதிஷ்டம்

அமெரிக்காவில் வேலை இழந்த பெண்ணிற்கு அடித்த அதிஷ்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026