தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுத்தராத சிங்கள ஜனாதிபதிகள் : சிறிநேசன் ஆதங்கம்

Sri Lankan Tamils P Ariyanethran Ranil Wickremesinghe Sri Lanka Presidential Election 2024
By Sathangani Aug 28, 2024 05:36 AM GMT
Report

இலங்கையின் கடந்த 8 ஜனாதிபதி தேர்தல்களிலும் எங்களுடைய வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்ற சிங்கள ஜனாதிபதிகள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுத்தரவில்லை என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் (Srineshan) தெரிவித்துள்ளார்.

ஐபிசி தமிழின் பார்வைகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “தமிழரசுக்கட்சியைப் பொறுத்தமட்டில் இன்னும் பொது வேட்பாளர் தொடர்பான தீர்மானம் ஒன்று எடுக்கப்படவில்லை .

போர்க்குற்றவாளிகளை எமது அரசாங்கத்தில் தண்டிக்க விட மாட்டோம் : ஆணித்தரமாக கூறும் ஜனாதிபதி வேட்பாளர்

போர்க்குற்றவாளிகளை எமது அரசாங்கத்தில் தண்டிக்க விட மாட்டோம் : ஆணித்தரமாக கூறும் ஜனாதிபதி வேட்பாளர்

சமாதான தேவதை

கடந்த எட்டு ஜனாதிபதி தேர்தல்களில் சென்ற வேட்பாளர்களுக்கு வாக்களித்திருக்கின்றோம். ஆனால் தமிழர்களின் இனப்பிரச்சினை, யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், தமிழ் அரசியல் கைதிகள், இராணுவ ஆக்கிரமிப்பு போன்ற பல பிரச்சினைகளுக்கு எங்களால் வாக்களித்து தெரிவுசெய்யப்பட்ட சிங்கள ஜனாதிபதிகள் தீர்வைப் பெற்றுத்தரவில்லை.

தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுத்தராத சிங்கள ஜனாதிபதிகள் : சிறிநேசன் ஆதங்கம் | Tamil General Candidate In Sl President Election

குறிப்பாக சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க (Chandrika Kumaratunga) ஒரு சமாதான தேவதையாக எங்களுக்கு காட்சியளித்தார். வாக்களித்தோம் எதுவும் நடைபெறவில்லை. யுத்தத்தின் பின்னர் மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) ஏதோ எல்லாம் சொல்லிக்கொண்டு வந்தார். ஆனால் எதுவும் செய்யவில்லை.

ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) அந்தக் காலத்தில் பிரதமராக இருந்தார். நல்லாட்சிக் காலத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஊட்டிவிட்டு பின்னர் அதுவும் கிடைக்கவில்லை.

எனவே கடந்த காலத்தில் ஜனாதிபதி தேர்தல்கள் மூலமாக தெரிவுசெய்யப்பட்ட 8 ஜனாதிபதிகள் மற்றும் இடைக்கால ஜனாதிபதிகள் இருவர் உட்பட 10 ஜனாதிபதிகள் நாட்டை ஆட்சி செய்தனர்.

வரி குறைப்பு குறித்து ரணில் வெளியிட்டுள்ள தகவல்

வரி குறைப்பு குறித்து ரணில் வெளியிட்டுள்ள தகவல்

தமிழ் பொது வேட்பாளர்

ஆனால் அவர்களுடைய பார்வை, எண்ணம், சிந்தனை என்பன ஒரு இனத்தின் சார்பான ஜனாதிபதிகளாக நடந்துகொள்கின்றார்களே தவிர உரிமையைக் கேட்டுக்கொண்டிருக்கின்ற இனம் சம்பந்தமாக எந்தவொரு தீர்வையும் தரவில்லை.

தற்போது களத்தில் இறக்கப்பட்டுள்ள ஜனாதிபதி வேட்பாளர்களின் எண்ணிக்கை 38 ஆக இருந்தாலும் மூன்று சிங்கள வேட்பாளர்களுக்கு இடையில் தான் மும்முனைப் போட்டி நடைபெறுகின்றது. அந்த அடிப்படையில் சஜித் பிரேமதாசவா (Sajith Premadasa), ரணில் விக்ரமசிங்கவா, அனுர குமார திசாநாயக்கவா (Anura Kumara Dissanayake) என்ற போட்டி அமைந்துள்ளது. தமிழ் மக்கள் குறித்து நாங்கள் எதிர்பார்க்கின்ற விடயங்கள் அவர்களுடைய கையில் இல்லாதது போல் தான் தெரிகின்றது.

தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுத்தராத சிங்கள ஜனாதிபதிகள் : சிறிநேசன் ஆதங்கம் | Tamil General Candidate In Sl President Election

இந்த நிலையில் தான் 83 சிவில் சமூக கட்டமைப்புகளும் 7 தமிழ் தேசியக் கட்சிகளும் இணைந்து தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தியிருக்கின்றார்கள்.

கடந்த 8 தேர்தல்களிலும் சிங்கள வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இந்தமுறை ஒரு பொது வேட்பாளர் என்ற எண்ணக்கரு முதன்முறையாக நிறுத்தப்பட்டிருப்பதால் சிங்கள வேட்பாளர்கள் எங்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் நிலையில் தொடர்ந்தும் சிங்கள வேட்பாளர்களுக்கு நாங்கள் வாக்களிக்க வேண்டுமா, பொது வேட்பாளருக்கு வாக்களித்தால் என்ன, தாயகப் பிரதேசத்தில் வடக்கு கிழக்கில் வாழுகின்ற தமிழன் தமிழனுக்கு வாக்களித்தால் என்ன, என்ற சிந்தனை இப்போது மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கின்றது.“ என தெரிவித்துள்ளார்.

தமிழ் எம்.பிக்களுடன் நடந்த கலந்துரையாடல்: மகா சங்கத்தினருக்கு ரணில் விளக்கம்

தமிழ் எம்.பிக்களுடன் நடந்த கலந்துரையாடல்: மகா சங்கத்தினருக்கு ரணில் விளக்கம்



செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 

 


4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில், வண்ணார்பண்ணை, Colombes, France

11 Sep, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மேற்கு, Burgdorf, Switzerland

28 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வெள்ளவத்தை

12 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, கொடிகாமம், மெல்போன், Australia

15 Aug, 2024
மரண அறிவித்தல்

அராலி வடக்கு, யாழ்ப்பாணம், கொழும்பு

12 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தனங்கிளப்பு, உருத்திரபுரம், பெரியமாவடி, மடத்தடி, மீசாலை, Toronto, Canada

27 Aug, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada, வவுனியா

15 Sep, 2021
மரண அறிவித்தல்

சுன்னாகம், இரத்தினபுரி, கொழும்பு, தெல்லிப்பழை, Vaughan, Canada

10 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, மலேசியா, Malaysia

09 Sep, 2019
மரண அறிவித்தல்

கட்டைப்பிராய், கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada, Montreal, Canada

06 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, பிரித்தானியா, United Kingdom

14 Sep, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

10 Sep, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Paris, France, Scarborough, Canada

10 Sep, 2024
மரண அறிவித்தல்

குப்பிளான், London, United Kingdom

01 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், லியோன், France, சுவிஸ், Switzerland, இலங்கை

13 Sep, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, Scarborough, Canada

11 Sep, 2024
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய்

10 Sep, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

08 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Toronto, Canada

11 Sep, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016