தமிழ் கட்சிகள் புத்திசாலித்தனமாக செயற்பட வேண்டிய தருணம் - இந்தியாவுடன் பேச்சு நடத்த ஆலோசனை

Sivasakthy Ananthan Sri Lanka India
By Vanan Oct 17, 2022 11:47 AM GMT
Report

இந்திய அரசாங்கம் இலங்கை அரசுக்கு நிபந்தனை இல்லாமல் செய்கின்ற உதவிகளைத் தவிர்த்து, நிபந்தனையுடன் உதவி செய்யவேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஈழமக்கள் புரட்சிகள் விடுதலை முன்னணியின் செயலாளருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

அக்கட்சியின் முன்னாள் தலைவர் உள்ளிட்ட மறைந்த தியாகிகளை நினைவுகூரும் நிகழ்வு ஞயிற்றுக்கிழமை(16) மாலை மட்டக்களப்பு பெரியகல்லாற்றில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடு

தமிழ் கட்சிகள் புத்திசாலித்தனமாக செயற்பட வேண்டிய தருணம் - இந்தியாவுடன் பேச்சு நடத்த ஆலோசனை | Tamil Parties Talks With India Advised Sivasakthi

“அரசாங்கத்தில் பல்வேறுபட்ட குழப்பங்களும், தென்பகுதியிலே பல்வேறுபட்ட குழப்பங்களுடன் மிகவும் மோசமானதாகவும் இருந்தாலும்கூட தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாட்டை கைவிடுவதாக இல்லை.

ஐ.நா சபையிலே இருக்கின்ற போர்க்குற்றம், பொறுப்புக்கூறல் போன்ற விடங்களை எப்படி நீத்துப் போகச் செய்யலாம், அல்லது இலங்கை - இந்திய ஒப்பந்தத்தினூடாக கொண்டுவரப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தை எவ்வாறு இல்லாமல் செய்யலாம், வல்லரசுகள் இந்த அரசாங்கத்தை எதிர்க்கின்றபோது, அந்த வல்லரசுகளின் தேவைகளை நிறைவேற்றுகின்றபோது இந்த அரசாங்கம் நாட்டின் சில பகுதிகளை சில வல்லரசுகளுக்கு விட்டுக் கொடுப்பதனூடாக தமிழ் மக்களுக்குக் கிடைக்கின்ற உரிமைகளை நீத்துக்போகத்தான் செய்கின்றார்கள்.

எங்களது கட்சியினால் கொண்டு வரப்பட்ட வடக்கு கிழக்கு இணைந்த மாகாண அரசாங்கம்கூட எதிர்காலத்தில் எமது கையைவிட்டு நழுவிப்போகும் நிலமைதான் உள்ளது.

அதற்கான பேரம்பேசல்கள், அதற்காக வல்லரசுகளுக்கு சில இடங்களை தாரைவார்த்துக் கொடுத்து தமிழர்களுக்கு அதனை இல்லாமல் செய்யும், வேலைகள் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

இலங்கை - இந்திய ஒப்பந்தம்

தமிழ் கட்சிகள் புத்திசாலித்தனமாக செயற்பட வேண்டிய தருணம் - இந்தியாவுடன் பேச்சு நடத்த ஆலோசனை | Tamil Parties Talks With India Advised Sivasakthi

எனவே தமிழ் அரசியல் கட்சி தலைவர்கள் தமக்குள்ளே இருக்கின்ற விருப்பு வெறுப்புக்களைக் கடந்து தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்காக அனைவரும் ஒரு பொது நிலைப்பாட்டுக்கு வரவேண்டும்.

இலங்கை அரசாங்கத்திற்கு இந்திய அரசு 4 பில்லியன் நிதி உதவி செய்துள்ளது. எனவே இந்திய அரசாங்கம் இலங்கை அரசுக்கு நிபந்தனை இல்லாமல் செய்கின்ற உதவிகளைத் தவிர்த்து நிபந்தனையுடன் உதவி செய்யவேண்டும்.

இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துமாறு கேட்கவேண்டும் என்பதை இந்திய அரசுக்கு தமிழ் கட்சிகள் வலியுறுத்த வேண்டும். இதற்கெல்லாம் தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒருமித்து ஒரு பொது நிலைப்பாட்டுக்கு வரவேண்டும். இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் விட்டால் மாகாண சபை முறைமையும் கைநழுவிப்போகும்.

யுத்தம் முடிந்து 12 வருடங்கள் கழிந்த பின்னரும், ஐ.நா மனித உரிமை பேரவையிலும்கூட போர்குற்றம், என்பன கைநழுவிப்போகின்ற நிலமை இருக்கின்றது.

எனவே நாம் அளப்பெரிய தியாகங்களை இந்த மண்ணிலே செய்திருக்கின்றோம். எமது கட்சியில் மாத்திரம் சுமார் 3000 இற்கு மேற்பட்ட தோழர்கள் உயிர் நீர்த்துள்ளார்கள். அதிகளவு போராளிகள், 150000 மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள், பில்லியன் கணக்கான சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன.

புத்திசாலித்தனமாக செயற்பட வேண்டிய காலம்

தமிழ் கட்சிகள் புத்திசாலித்தனமாக செயற்பட வேண்டிய தருணம் - இந்தியாவுடன் பேச்சு நடத்த ஆலோசனை | Tamil Parties Talks With India Advised Sivasakthi

இவைகளையெல்லம் கருத்திற்கொண்டு, தமிழ் கட்சிகள் புத்திசாலித்தனமாக, இராஜதந்திர ரீதியாக, அறிவுபூர்வமதாகச் சிந்தித்து, பூகேள ரீதியான அரசியலையும் கருத்திற்கொண்டு செயற்பட வேண்டிய காலம் நெருங்கி வந்துள்ளது.

அதற்காக வெகுவிரைவிலே தமிழ் கட்சிகளுக்கிடையே ஒன்றுபட்டுச் செயற்படுவதற்கான கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெறவுள்ளது.

எனவே மக்களுடைய துயரங்களைக் கருத்திற்கொண்டு அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட முன்வர வேண்டும்” என்றார். 

ReeCha
மரண அறிவித்தல்

சில்லாலை, Datteln, Germany, Olfen, Germany

23 Jul, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

25 Jul, 2005
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

kilinochchi, London, United Kingdom

06 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Meschede, Germany

23 Jul, 2025
அகாலமரணம்

மீரிகம, யாழ்ப்பாணம், Noisy-le-Grand, France

30 Jun, 2025
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, சமரபாகு

25 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Markham, Canada

10 Aug, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Chenevières, France

21 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, புங்குடுதீவு, Oberburg, Switzerland

25 Jul, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், தாவடி

10 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Bützberg, Switzerland

24 Jul, 2024
மரண அறிவித்தல்

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
மரண அறிவித்தல்

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Mississauga, Canada

21 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Woodbridge, Canada

29 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

சுழிபுரம், Bowmanville, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, அராலி வடக்கு, யாழ்ப்பாணம், helsinki, Finland

20 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025