வவுனியாவில் மாணவனை தாக்கிய ஆசிரியை : எடுக்கப்பட்ட நடவடிக்கை
வவுனியா (Vavuniya) - பண்டாரிகுளம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் முதலாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவரை ஆசிரியை தாக்கியதில் குறித்த மாணவன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.
முதலாம் ஆண்டில் கற்கும் மாணவனை புல்லாங்குழல் போன்ற உபகரணத்தினால் தலையில் தாக்கியதாக குறித்த மாணவன் கூறியதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக தலையில் காயத்துக்கு உள்ளான சிறுவன் வவுனியா பொது வைத்தியசாலையில் இரண்டு நாட்கள் சிகிச்சை பெற்ற நிலையில் தற்போது திரும்பி உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
காவல்துறையில் முறைப்பாடு
இதேவேளை குறித்த ஆசிரியர் தொடர்பாக வவுனியா காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதோடு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் ஆளுநர் செயலகத்திற்கும் இது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இந்த நிலையில் குறித்த ஆசிரியை வவுனியா காவல்துறையினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
