தமிழர் தலைநகரில் மாயமான யுவதி பாழடைந்த கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு

Trincomalee Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Raghav Jul 05, 2024 12:09 PM GMT
Report

புதிய இணைப்பு

காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்ட பெண்ணின் சடலமும் அவரது கைப்பையும் திருகோணமலை, மூதூர் காவல்துறை பிரிவுக்குட்பட்ட கிளிவெட்டி கிராமத்தில் உள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து காவல்துறையினரால் இன்று (05) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதன் போது, டேஸ்குமார் வினோதினி என்ற 25 வயதான பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


மூதூர் காவல்நிலையத்தில் காணாமல்போனதாக செய்யப்பட்ட முறைப்பாட்டை விசாரித்த காவல்துறையினர் சந்தேகத்துக்கிடமான கிணற்றை மூதூர் நீதிமன்ற நீதிபதி எச்.எம் தஸ்னீம் பௌசான், திடீர் மரண விசாரணை அதிகாரி ஆகியோர் முன்னிலையில் இன்று (05) தோண்டியபோதே குறித்த பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பின்னர், அந்த சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  

உணவகங்களில் தொடரும் முறைக்கேடுகள்: கோழிக் கறியில் இருந்த மண்

உணவகங்களில் தொடரும் முறைக்கேடுகள்: கோழிக் கறியில் இருந்த மண்

முதலாம் இணைப்பு 

திருகோணமலை (Trincomalee) - சேருவில காவல்துறை பிரிவுக்குட்பட்ட தங்கநகர் பகுதியைச் சேர்ந்த 25 வயது யுவதியொருவர் காணாமல் போயுள்ளதாக அவரது குடும்பத்தினரால் சேருவில மற்றும் மூதூர் காவல்நிலையங்களில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு விசாரணையை ஆரம்பித்துள்ள மூதூர் (Mutur) காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் கிளிவெட்டியைச் சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளனர்.

சந்தேக நபரை விசாரணை செய்ததன் அடிப்படையில், கிளிவெட்டி கிராமத்தின் எல்லைப்புறத்தில் பாழடைந்து கிடக்கும் கிணறு ஒன்றை தோண்டுவதற்கு நீதிமன்ற அனுமதியை பெற்றுள்ளனர்.

பாரிய விபத்தை தடுத்த பேருந்து சாரதி: மயிரிழையில் தப்பிய பயணிகள்

பாரிய விபத்தை தடுத்த பேருந்து சாரதி: மயிரிழையில் தப்பிய பயணிகள்

காணொளி அழைப்பு

இந்நிலையில், அப்பகுதியில் நேற்று (03) புதன்கிழமை முதல் காவல்துறை உத்தியோகத்தர்கள் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், அந்த கிணறு நாளைய தினம் (5) வெள்ளிக்கிழமை காலை மூதூர் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் தோண்டப்படவுள்ளதாக மூதூர் காவல்துறையினர்தெரிவித்துள்ளனர்.

தமிழர் தலைநகரில் மாயமான யுவதி பாழடைந்த கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு | Teenage Girl Goes Missing With Boyfriend Murder

தங்கநகர் கிராமத்தைச் சேர்ந்த இந்த யுவதியும் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அயல் கிராமமான கிளிவெட்டி கிராமத்தைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞனும் காதலித்து வந்தமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த மே மாதம் யுவதி காதலனுடன் மட்டக்களப்புக்கு சென்று வசித்து வந்ததாகவும், மே மாதம் (31)ஆம் திகதி மாலை அழுது கதைத்த குரல் பதிவொன்றையும் குடும்பத்தாருக்கு அனுப்பியுள்ளார்.

அதனை தொடர்ந்து, அன்றைய தினம் இரவு காணொளி அழைப்பில் குடும்பத்தாருடன் கதைத்திருந்ததாகவும், இதன்போது வீட்டுக்கு வருவதாக தெரிவித்திருந்ததாகவும் அதன் பின்னர் அவருடன் தொடர்பில்லாமல் போனதாக தெரிவிக்கப்படுகிறது.

தென்னிலங்கையை உலுக்கிய மாணவி - மாணவன் மரணம்: வெளிவராமல் தொடரும் பின்புலம்

தென்னிலங்கையை உலுக்கிய மாணவி - மாணவன் மரணம்: வெளிவராமல் தொடரும் பின்புலம்

மேலதிக விசாரணை

இதனையடுத்து, காதலனின் தொலைபேசி இலக்கத்துக்கு யுவதியின் குடும்பத்தார் பல முறை முயற்சித்தபோதும், ஜூன் மாதம் (13)ஆம் திகதி அவர் அழைப்பெடுத்து, தான் வேலையில் நிற்பதாகவும் வீட்டுக்குச் சென்று அக்காவுடன் கதைக்கக் கொடுப்பதாகவும் யுவதியின் தம்பியிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

தமிழர் தலைநகரில் மாயமான யுவதி பாழடைந்த கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு | Teenage Girl Goes Missing With Boyfriend Murder

அதன் பின்னர் எவ்வித தொடர்பும் இல்லாத நிலையில், சேருவில மற்றும் மூதூர் காவல்நிலையங்களில் யுவதியின் குடும்பத்தினர் ஜூலை மாதம் முதலாம் திகதி முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்த நிலையில், கொலை செய்து கிணற்றில் போடப்பட்டிருக்கலாம் என்றும் ஜே.சி.பி இயந்திரத்தின் உதவியுடன் அருகில் இருந்த குப்பைகளைக் கொண்டு காதலனால் கிணறு மூடப்பட்டிருக்கலாம் எனவும ்காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மூதூர் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். 

புதுக்குடியிருப்பில் யுக்திய சுற்றிவளைப்பு: சந்தேக நபர்கள் அதிரடியாக கைது

புதுக்குடியிருப்பில் யுக்திய சுற்றிவளைப்பு: சந்தேக நபர்கள் அதிரடியாக கைது

கடலில் மிதந்து வந்த மர்ம திரவத்தை குடித்த கடற்றொழிலாளர்கள்: உயிரிழக்க முன் எடுத்த கடைசி புகைப்படம்

கடலில் மிதந்து வந்த மர்ம திரவத்தை குடித்த கடற்றொழிலாளர்கள்: உயிரிழக்க முன் எடுத்த கடைசி புகைப்படம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


GalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026