டிசம்பரில் நெருக்கடியை சந்திக்க போகும் அநுர அரசு : எச்சரிக்கும் எதிர்க்கட்சி
அரசாங்கம் டிசம்பர் மாதத்தில் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்கப் போவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் (Kabir Hashim) தெரிவித்துள்ளார்.
பொருளாதார குறிகாட்டிகளை முன்வைத்து அவர் நாடாளுமன்றத்தில் அரசாங்கத்திற்கு அவதான எச்சரிக்கை ஒன்றை செய்ததோடு,கோட்டாபய ஆட்சி காலத்திலும் அரசாங்கம் ஆபத்தான நிலையை நோக்கி செல்கையில் தாம் இவ்வாறு சுட்டிக்காட்டியதாகவும் நாடாளுமன்றில் இன்று (19.08.2025) உரையாற்றும் போது குறிப்பிட்டார்.
அவர் இக்காரணங்கள் தொடர்பில் விரிவாக விவரிக்கையில், மத்திய அதிவேக பாதையின் எஞ்சியுள்ள வேலைகளை முடிப்பதற்காக சீனாவின் எக்சீம் வங்கியில் டொலர் மில்லியன் 500 ம் திரைசேறியில் டொலர் மில்லியன் 493 உடன் 993 மில்லியன் கடன் பெற்றுக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி அண்மையில் நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார்.
மறுசீரமைப்பு குழு
குறித்த கடன்,கடன் மறுசீரமைப்பு குழுவின் அங்கீகாரத்திற்கு உட்பட்டுள்ளதா?அத்தோடு இந்த கடனை எப்படி செலுத்த போவதாகவும் குறிப்பிடவில்லை.
கட்டாயம் அதிவேக பாதைகள் நிர்மாணிக்கப்பட வேண்டும் ஆனால் கடனை செலுத்தம் வழிகளையும் தேடிக் கொள்வது சிறந்ததாகும்.
இந்த வருடத்தில் எமக்கு IMF டொலர் மில்லியன் 335 ரூபாவை வழங்கியுள்ளது.அத்தோடு இதர நிறுவனங்களான உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றில் 300-305 டொலர் மில்லியன் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டொலர் மில்லியன் 95 ரூபாவே கிடைத்துள்ளது.அதவும் எமக்கு பாதிப்பாகும்.
மேலும் இந்த வருடத்தில் முடிவடைந்த ஆறு மாதங்களில் வெளிநாட்டு கையிருப்பு குறைவடைந்துள்ளது. 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் -நொவம்பர் மாதத்தில் காணப்பட்டதை விட குறைந்துள்ளது.
வெளிநாட்டு கையிருப்பு
மேலும் இலங்கையின் தேசிய நிதி சந்தையில் டொலரின் கொடுக்கல் வாங்கல்கள் அதிகரித்துள்ளன. இலங்கையின் மொத்த வெளிநாட்டு கையிருப்பு 2025 மார்ச்சில் டொலர் மில்லியன் 6531 யிலிருந்து நான்கு மாதங்களில் 6044 டொலர் மில்லியனா குறைவடைந்துள்ளது.
மேலும் ஆகக் குறைந்த வெளிநாட்டு கையிருப்பு 2025 மார்ச் மாதத்தில் 2789 டொலர் மில்லியன் காணப்பட்ட நிலையில் ஜுலை மாதத்தில் 2210 வரை குறைந்துள்ளது. அரசின் நிதி நிலைமையில் இவ்வாறான சம்பவங்கள் சிவப்பு எச்சரிக்கையாகவே தோன்றுகிறது.
இவ்வாறு நாங்கள் குறிப்பிடும் தகவல்களை அரசாங்கம் குறையாகவே பார்க்கிறது.ஆனால் இலங்கை மத்திய வங்கி பின்பற்றும் நிதி கொள்கைகளால் அரசாங்கம் பாதுகாப்படுகிறது என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் ஒருமுகத் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 19 மணி நேரம் முன்
