இலங்கை தமிழ் மக்கள் தொடர்பாக இந்தியாவிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
இலங்கையில் தமிழினத்தின் பிரச்சினைகளை தீர்த்து சுதந்திரமாக தன்னாதிக்க சுயாட்சியோடு தமிழினம் வாழ்வதற்கு இந்தியா (India) உதவ வேண்டும் என அகில இலங்கை (Sri Lanka) இந்துமா மன்றத்தின் உபதலைவர் செஞ்சொற்செல்வர் ஆறு.திருமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியாவில் நடந்து முடிந்த 18 ஆவது மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு (Narendra Modi) வாழ்த்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “பாரத தேசத்தின் முதல்வராக மீண்டும் பதவியேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு அகில இலங்கை இந்துமா மன்றத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
இலங்கை தமிழர்கள்
ஆத்மீக பலத்தோடும் உயர்ந்த இலட்சியத்தோடும் இடைவிடாத முயற்சியோடும் இந்தியாவை கட்டியெழுப்பும் கட்டியெழுப்புகின்ற இந்திய பிரதமர் மீண்டும் இந்தியாவை ஆளும் பெரும் பொறுப்பை ஏற்றிருக்கின்றார்.
அதேவேளை, நரேந்திர மோடி இலங்கை தமிழர்களை நோக்கி யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த போது தமிழர்களுக்கு பிரச்சினை உண்டு எனவும் அதனை நான் அறிவேன் எனவும் அப் பிரச்சினையை தீர்க்க நான் ஆவலாக உள்ளேன் எனவும் பல தடவைகள் தெரிவித்துள்ளார்.
எனவே, இம் முறையாவது இந்தியாவின் பிரதமராக தாங்கள் மீண்டும் பதவியேற்கின்ற இந்த வேளையிலே இலங்கையில் தமிழினத்தின் பிரச்சினைகளை தீர்த்து சுமூகமாக சுதந்திரமாக தன்னாதிக்க சுயாட்சியோடு தமிழினம் வாழ்வதற்கு தாங்கள் உதவ வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
![11 தமிழ் இளைஞர்கள் காணாமற் போன சம்பவம் : முன்னாள் கடற்படை தளபதியின் மனுவை விசாரிக்கும் ஐந்து நீதிபதிகள்](https://cdn.ibcstack.com/article/6089efba-8687-49a3-8551-88fa6a8f9852/24-6663ee12b55e2-sm.webp)
11 தமிழ் இளைஞர்கள் காணாமற் போன சம்பவம் : முன்னாள் கடற்படை தளபதியின் மனுவை விசாரிக்கும் ஐந்து நீதிபதிகள்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![](https://cdn.ibcstack.com/bucket/63039cb22bd37.webp)
![அகதியாய் இருக்கும் துயரம் உலகில் எவருக்கும் வேண்டாம்…](https://cdn.ibcstack.com/article/8170aadf-e519-44c1-8849-b5aa88b7da2a/24-66736d16968e6-md.webp)
அகதியாய் இருக்கும் துயரம் உலகில் எவருக்கும் வேண்டாம்… 4 நாட்கள் முன்
![இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….](https://cdn.ibcstack.com/article/528b1858-c217-44bd-aa75-8d6f4258fc70/24-666c04ec6747a-sm.webp)
இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….
1 வாரம் முன்![கல்வி ஆயுதம் தான் தமிழினத்தை மீள் எழுச்சி கொள்ளச் செய்யும்…](https://cdn.ibcstack.com/article/be32300b-7292-4007-95f8-41795e7a8c3f/24-6662705be1451-sm.webp)