மக்களுக்காக போராடியவர்கள் சிறையில்! கொள்ளையடித்தவர்கள் அமைச்சு பதவியில்: சாணக்கியன் (காணொளி)
தடைச்சட்டம்
மக்களுக்காக போராடியவர்களை சிறையில் வைத்து கொண்டு மக்களுடைய பணத்தை கொள்ளையடித்தவர்களுக்கு இராஜாங்க அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டிருக்கின்றன என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது பிரத்தியேக காணொளி ஒன்றின் மூலம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது பயங்கரவாத தடைச்சட்டம் மூலம் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக பயங்கரவாத தடைச்சட்டத்தை எதிர்த்து நடைபெறும் கையெழுத்து போராட்டத்தில் இணைந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுத்தார்.
காங்கேசன்துறையில் இருந்து ஹம்பாந்தோட்டை வரையான குறித்த போராட்டம் இன்றைய தினம் கொழும்பு காலி முகத்திடலில் பெருமளவான மக்களின் ஆதரவுடன் இடம்பெற்று வருகின்றது.
காலிமுகத்திடல் போராட்டகாரர்கள் கைது செய்து சிறையில் உள்ளார்கள் எனவும் அவர்கள் கைது செய்யப்பட்ட அதே இடத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக கையெழுத்து போராட்டம் இடம்பெறுகின்றது எனவும் அதில் அனைவரையும் பங்கு கொள்ளுமாறும் அழைப்பு விடுத்தார்.