யாழில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இளைஞர்கள்
யாழ்ப்பாணம் (Jaffna) - கொழும்புத்துறை பகுதியில் 180 போதை மாத்திரைகளுடன் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று யாழ்ப்பாணம் - கொழும்புத்துறை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் 18, 22 மற்றும் 24 வயதுடையவர்கள் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
விசாரணை
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் கீழ் இயங்கும் காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் காவல் நிலைய போதைப்பொருள் தடுப்பு காவல்துறையினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
விசாரணைகளின் பின்னர் குறித்த சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
