கொட்டாவை -மகும்புர பேருந்து நிலையத்தில் கோர விபத்து : ஐவர் படுகாயம்
Colombo
Sri Lanka
Accident
By Shalini Balachandran
கொட்டாவை (Kottawa)-மகும்புர அதிவேக நெடுஞ்சாலை பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து சம்பவமானது இன்று (12) காலை இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில், விபத்து சம்பவத்தில் ஐந்து பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பேருந்து சாரதி கைது
பாதுக்காவில் இருந்து சென்ற தனியார் பேருந்தானது பேருந்து நிலையத்திற்குள் நுழைய முற்பட்ட போது, பேருந்தின் தடுப்பு செயலிழந்ததால் சாரதியால் பேருந்தை கட்டுப்படுத்த முடியாமல் நின்றிருந்த மற்றுமொரு பேருந்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
மேலும், பேருந்து நிலையம் பலத்த சேதமடைந்துள்ளதுடன் பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![](https://cdn.ibcstack.com/bucket/63039cb22bd37.webp)
![யூதர்கள் முதல் ஈழத்தவர்கள் வரை பன்னாட்டு பெரும் இனவழிப்பு நினைவுநாள்](https://cdn.ibcstack.com/article/6a2df536-6236-4cba-8f99-2439b81db733/24-667d3eb68c81c-md.webp)
யூதர்கள் முதல் ஈழத்தவர்கள் வரை பன்னாட்டு பெரும் இனவழிப்பு நினைவுநாள் 19 மணி நேரம் முன்
![இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….](https://cdn.ibcstack.com/article/528b1858-c217-44bd-aa75-8d6f4258fc70/24-666c04ec6747a-sm.webp)
இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….
1 வாரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்