மின்வெட்டு நேரத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! எடுக்கப்பட்ட புதிய தீர்மானம்
Power cut Sri Lanka
Power Cut Today
Minister of Energy and Power
By pavan
இலங்கையில் நாளை முதல் மின்வெட்டு நேரங்களில் மாற்றம் ஏற்பட்ட புதிய தகவலொன்று வெளியாகியுள்ளது.
நாளாந்த மின்வெட்டை 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களாக நீடிக்குமாறு இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதற்கமைய நாளை (23)முதல் நடைமுறைக்கு வரும் வகையில், மின்வெட்டு நேரத்தை இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களாக அதிகரிப்பதற்கு தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மின்வெட்டு வலயங்கள்
அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் நாளை(23) முதல் செப்டெம்பர் 25 ஆம் திகதி வரை பகலில் ஒரு மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரம் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.