இருளில் மூழ்கப்போகும் அபாயத்தில் சிறிலங்கா! பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எச்சரிக்கை
Power cut Sri Lanka
Power Cut Today
Minister of Energy and Power
By pavan
அடுத்த மாதம் 28ஆம் திகதி முதல் நாளொன்றுக்கு 08 முதல் 10 மணிநேரம் வரை மின்சாரம் தடைப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கதெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை ஊடகமொன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் இணைந்துகொண்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எங்களிடம் 28ம் திகதி வரை நிலக்கரி கையிருப்பு உள்ளது. பிரச்சினை என்னவென்றால், 28ம் திகதிக்கு பின்னர் நிலக்கரி தீர்ந்துவிட்டால் 3 மின் உற்பத்தி நிலையங்களையும் மூட வேண்டிய நிலை ஏற்படும்.
நிலக்கரி கப்பல்
சுமார் 820 மெகாவொட் இழப்பு ஏற்படும். இன்றோ நாளையோ நமக்குத் தேவையான நிலக்கரியை முன்பதிவு செய்யாவிட்டால், நாளொன்றுக்கு 08 முதல் 10 மணிநேரம் வரை மின்சாரம் தடைப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இலங்கைக்கு 5 நாட்களுக்கு ஒருமுறை நிலக்கரி கப்பல் வர வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.