தொடருந்தில் இருந்து தள்ளிவிடப்பட்டு பாதுகாப்பு உத்தியோகத்தர் கொலை
பாதுகாப்பு உத்தியோகத்தர்
சனிக்கிழமை (23) அதிகாலையில் ஓடும் தொடருந்தில் இருந்து பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் வெளியே தள்ளப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் நோக்கிச் பயணித்துக்கொண்டிருந்த புகையிரதம் வெயங்கொடையை அண்மித்துச் சென்று கொண்டிருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தொடருந்தில் பயணித்த சிலர் மதுபோதையில் இருப்பதாகவும் சக பயணிகளுக்கு இடையூறு விளைவிப்பதாகவும் வந்த முறைப்பாட்டையடுத்து குறித்த பாதுகாப்பு உத்தியோகத்தர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார்.
சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
இந்நிலையில் மதுபோதையில் இருந்த பயணிகளை அவ்விடத்தில் இருந்து அகற்ற முயற்சிக்கும் போதே நபர் ஒருவர் பாதுகாப்பு அதிகாரியை உதைத்துள்ளார்.
உதைத்ததால் தொடருந்தில் இருந்து வெளியே விழுந்த பாதுகாப்பு அதிகாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுதொடர்பில் காவல்துறையினருக்கு அறிவித்ததையடுத்து வெயங்கொட காவல்துறையினர், வதுராவ புகையிரத நிலையத்திலிருந்து 100 மீற்றர் தொலைவில் கிடந்த பாதுகாப்பு உத்தியோகத்தரின் சடலத்தை மீட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் 52 வயதுடைய ஒருத்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் நொச்சியாகம பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் மற்றும் அனுராதபுரத்தைச் சேர்ந்த 23 வயதுடைய சந்தேகநபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.