ஜெலன்ஸ்கிக்கு ட்ரம்பிடம் இருந்து பறந்த முக்கிய அறிவிப்பு
அமெரிக்க (America) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) உக்ரைன் (Ukraine) ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கு (Volodymyr Zelenskyy) முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியுள்ளதாக சர்வதேச நாடுகள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த அறிவுருத்தலில் நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணையக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.
ஜெலன்ஸ்கி, ரஷ்யா தங்கள் நாட்டை ஆக்கிரமிக்கும் என்று அஞ்சி நேட்டோ இராணுவ கூட்டமைப்பில் இணைய, 2022 இல் முயற்சித்தார்.
கடும் எதிர்ப்பு
இதற்கு ரஷ்ய (Russia) ஜனாதிபதி புடின் (Vladimir Putin) கடும் எதிர்ப்பு தெரிவித்தமையுடன் தங்கள் நாட்டின் இறையாண்மைக்கு ஆபத்து என்றும், இணையும் முயற்சியை கைவிடாவிட்டால் போர் தொடுப்போம் என்றும் தெரிவித்திருந்தார்.
இதனால், 2022 பெப்ரவரியில் உக்ரைன் மீது ரஷ்யா போரை ஆரம்பித்த நிலையில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் இந்த போரில் இதுவரை 13,000 இற்கும் மேற்பட்ட உக்ரைன் மக்கள் இறந்து உள்ளனர்.
நாட்டின் இறையாண்மை
இந்தநிலையில், தற்போது ட்ரம்ப் தெரிவித்துள்ளதாவது, “உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி விரும்பினால் ரஷ்யாவுடனான போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர முடியும்.
இல்லையென்றால் அவர் தொடர்ந்து போராடலாம், அது எப்படி தொடங்கியது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
நேட்டோ அமைப்பில் உக்ரைனை இணைக்க கூடாது, சில விஷயங்கள் ஒருபோதும் மாறாது” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் வேல்விமானம் திருவிழா
