புடினைச் சந்திக்க தயாராகும் ட்ரம்ப்
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தனது திருத்தப்பட்ட சமாதானத் திட்டத்தை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஏற்றுக்கொண்டால், அவரை மீண்டும் நேருக்கு நேர் சந்தித்து இராஜதந்திரப் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இவ்வாறு கூறினார்.
ரஷ்ய ஜனாதிபதியும் தன்னைச் சந்திக்கத் தயாராக இருப்பதாக ட்ரம்ப் அப்போது செய்தியாளர்களிடம் வலியுறுத்தினார்.
உக்ரைன் நேட்டோவில் இணைய முயன்றதால் இராணுவ நடவடிக்கை
உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கியின் அரசாங்கம் நேட்டோ உறுப்புரிமையை நாடுவதால், ரஷ்ய ஜனாதிபதி புடின் உக்ரைனுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுத்தார்.

நேட்டோ, அல்லது வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு, என்பது ரஷ்யாவிலிருந்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்காக அமெரிக்கா, கனடா மற்றும் பிற மேற்கு ஐரோப்பிய நாடுகளால் உருவாக்கப்பட்ட ஒரு இராணுவக் கூட்டணியாகும்.
ட்ரம்ப்- புடின் பேச்சு தோல்வி
சோவியத் ஒன்றியத்தின் போது, உக்ரைன், ரஷ்யாவின் ஒரு பகுதியாக இருந்தது. அண்டை நாடான உக்ரைன் நேட்டோவில் உறுப்பினராக இருப்பது ரஷ்யாவின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்தது. அதற்கேற்ப புடின் உக்ரைனுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுத்தார்.

ரஷ்ய-உக்ரைன் போரை விரைவாக முடிவுக்குக் கொண்டுவருவதாக உறுதியளித்து ட்ரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தைத் தொடங்கினார். ஓகஸ்ட் 2025-ல், அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள அலாஸ்காவில் இருக்கும் ஒரு அமெரிக்க இராணுவத் தளத்தில், ட்ரம்பிற்கும் புஷடினுக்கும் இடையே உக்ரைன் போர் குறித்து நேருக்கு நேர் சந்திப்பு நடைபெற்றது.
இருப்பினும், அந்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன. ஏனெனில், ரஷ்யா உக்ரைனின் நிபந்தனைகளுக்கு உடன்படவில்லை, உக்ரைனும் ரஷ்யாவின் நிபந்தனைகளுக்கு உடன்படவில்லை.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |