கட்டுநாயக்காவில் வந்திறங்கிய சீன பிரஜைகள் இருவர் கைது..! நடந்தது என்ன..!
வெளிநாடொன்றிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய சீன பிரஜைகள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
தாய்லாந்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணி ஒருவரின் கைபையில் இருந்து உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நாணயங்களைத் திருடிய குற்றச்சாட்டிலேயே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் இருவரையும், விமான நிலைய காவல்துறையினர் இன்று திங்கட்கிழமை (07) கைது செய்ததுடன் மேலும் பணத்தின் ஒரு பகுதியும் மீட்கப்பட்டது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
உறவினரை பார்க்க வந்தவரிடம் கைவரிசை
இலங்கை மற்றும் அமெரிக்காவின் இரட்டை குடியுரிமையைப் பெற்றுள்ள 71 வயதான நபர், ராகம, வெலிசறை பகுதியில் வசிக்கும் உறவினர்களைப் பார்வையிட கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தார்.
தாய்லாந்தின் பாங்கொக்கிலிருந்து தாய் ஏர்வேஸ் விமானம் TG-307 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று திங்கட்கிழமை (07) அதிகாலை 12.43 மணிக்கு வந்தடைந்தார்.
முன்னதாக அவர் தனது சூட்கேஸை விமானத்தின் லக்கேஜ் ரேக்கில் வைத்துவிட்டு தூங்கிக் கொண்டிருந்தபோது, விமானத்தில் பயணம் செய்த இரண்டு சீன பிரஜைகள் சூட்கேஸிலிருந்து 2,000 அமெரிக்க டொலர்கள் மற்றும் 60,000 இலங்கை ரூபாய்களைத் திருடியுள்ளனர்.
விமானக் குழுவினருக்கு சம்பவம் குறித்து தகவல்
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த மற்ற பயணிகள், விமானக் குழுவினருக்கு சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய பிறகு, விமானக் குழுவினர் சீன நாட்டவர்கள் இருவரையும் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறையினரிடம் ஒப்படைப்பு
அவர்கள் சீன நாட்டைச் சேர்ந்த இருவரையும், கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர், அங்கு அவர்கள் கைது செய்யப்பட்டனர், மேலும் நடத்தப்பட்ட விசாரணைகளில், அவர்கள் திருடிய பணத்தில் ஒரு தொகையை காவல்துறையினரால் மீட்க முடிந்தது.
அதன்படி, 36 வயதான சீன நாட்டவரிடமிருந்து 900 அமெரிக்க டொலர்கள் மற்றும் இலங்கை ரூபாய் 55,000 மற்றும் 39 வயதான மற்றொரு சீன நாட்டவரிடமிருந்து 300 அமெரிக்க டொலர்கள் ஆகியவற்றை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பணத்துடன் சீன நாட்டவர்கள் இருவரும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
