கட்டுநாயக்க விமான நிலையத்தில் சீன பிரஜைகள் அதிரடியாக கைது
டுபாயில் இருந்து இலங்கை வந்த இலங்கையர் ஒருவரின் பயணப் பொதிகளிலிருந்த தங்கப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை திருடிய சம்பவம் தொடர்பில் சீன பிரஜைகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஹிக்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான இரண்டு வைரம் பதித்த மோதிரங்கள், ஒரு தங்க நெக்லஸ், ஒரு தங்க மோதிரம், ஒரு கைக்கடிகாரம். 11 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான பென்டன்ட் உட்பட பொருட்களை சந்தேகநபர்கள் திருடியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஒரே விமானத்தில் வந்த சீன பிரஜைகள்
முறைப்பாடு செய்த இலங்கையர் மற்றும் சீன பிரஜைகள் என சந்தேகிக்கப்படும் இருவரும் நேற்று (23) அதிகாலை அபுதாபியில் இருந்து ஒரே விமானத்தில் இலங்கை வந்துள்ளனர்.
சீன பிரஜைகளிடம் சிக்கிய பொருட்கள்
இலங்கை வந்த பயணி தனது பயணப் பொதியை சோதனையிட்ட போது அதில் பொருட்கள் எதுவும் இல்லை என முறைப்பாடு செய்துள்ளார். அனைத்து பயணிகளையும் சோதனையிட்ட போது இரண்டு சீன சந்தேக நபர்களிடம் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
கைது செய்யப்பட்ட சீன பிரஜைகள் (36) மற்றும் (31) வயதுடையவர்கள் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![](https://cdn.ibcstack.com/bucket/63039cb22bd37.webp)
![யூதர்கள் முதல் ஈழத்தவர்கள் வரை பன்னாட்டு பெரும் இனவழிப்பு நினைவுநாள்](https://cdn.ibcstack.com/article/6a2df536-6236-4cba-8f99-2439b81db733/24-667d3eb68c81c-md.webp)
யூதர்கள் முதல் ஈழத்தவர்கள் வரை பன்னாட்டு பெரும் இனவழிப்பு நினைவுநாள் 1 மணி நேரம் முன்
![இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….](https://cdn.ibcstack.com/article/528b1858-c217-44bd-aa75-8d6f4258fc70/24-666c04ec6747a-sm.webp)