கொழும்பில் பல பகுதிகளில் நீர் வெட்டு: வெளியான அறிவிப்பு
கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
இதனடிப்படையில் இன்று (09) மற்றும் நாளை (10) ஆகிய இரு தினங்களில் 12 மணித்தியால நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இந்தநிலையில், நீர் விநியோகம் தடை இரண்டு கட்டங்களாக தீர்மானிக்கப்படவுள்ளது.
12 மணிநேர நீர் விநியோகம் தடை
அதன்படி முதற்கட்டமாக ஹோமாகம நகரம், வேகந்த வீதி, பின்கெத்த வீதி, வலவ்வ வீதி, கெமுனு மாவத்தை,அத்துருகிரிய வீதி, கலவிலவத்தை, நியந்தகல, மஹகட்டுவான, மாகம்மன, தெனிய மற்றும் தியகம பல்கலைக்கழகப் பகுதி ஆகிய பகுதிகளில் இன்று (09) இரவு 8:00 மணி முதல் நாளை (10) காலை 8:00 மணி வரையிலான 12 மணிநேர நீர் விநியோகம் தடைப்படும்.
இரண்டாம் கட்டமாக பெலவத்தை, சித்தமுல்ல, எரவ்வல, நிவன்திடிய, போகுந்தர வீதி, ரத்மல்தெனிய, மஹரகம - பிலியந்தலை வீதி, மொரகெட்டிய வீதி, ஹிரிபிட்டிய மற்றும் கொரகபிட்டிய வீதி ஆகிய பகுதிகளில் நாளை (10) காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரையிலான 12 மணிநேர நீர் விநியோகம் தடைப்படும்.

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதால் தடையற்ற நீர் விநியோகத்தை உறுதிப்படுத்துவதில் சவால்கள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் காலப்பகுதிக்குத் தேவையான நீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக்கொள்ளுமாறும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |