வழமைக்கு திரும்பியது வாட்ஸ்-அப் செயலி..! வெளியாகிய காரணம்
இலங்கை, இந்தியா உட்பட்ட பல நாடுகளில் வாட்ஸ்-அப் செயலியில் தடங்கல் நிலை ஏற்பட்டிருந்தது.
இதன் காரணமாக வாட்ஸ்-அப் ஊடாக தொடர்புகளை ஏற்படுத்த முடியாமல் இருந்ததாக பயனர்கள் தெரிவித்துள்ளனர்.
வட்ஸ் எப் செயலியின் மத்திய பரிமாற்ற கட்டமைப்பில் (server-side) ஏற்பட்ட தொழினுட்ப பிரச்சினையே இதற்கு காரணம் என மெட்டாவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கட்டமைப்பில் ஏற்பட்டிருந்த பாதிப்பை சரிசெய்து வாட்ஸ்-அப் மீளமைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இரண்டாம் இணைப்பு
செயலிந்த நிலையில் இருந்த சற்றுமுன்னர் வழமைக்கு திரும்பியுள்ளது.
இருப்பினும் என்ன காரணமாக செயலிழந்த நிலையில் இருந்தது என்பதை பற்றிய விளக்கங்கள் இது வரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
கடந்த சில மணி நேரமாக வட்ஸ்-அப் செயலி சரியாக இயங்கவில்லை என ஏனைய சமூக வலைத் தள பாவனையாளர்கள் தெரிவித்து வருகின்றனர் .
தொழில்நுட்ப கோளாறு காரணமாக இவ்வாறு நிகழ்ந்திருக்க கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் ஒரு மணி நேரமாக உலகமெங்கும் இயங்காததால் தகவல் பரிமாற முடியாமல் மக்கள் அவதிப்பட்டுள்ளனர்.
உலகளாவிய ரீதியில் செயலிழப்பு
இலங்கை, இந்தியா உட்பட உலகளாவிய ரீதியில் வட்ஸ்அப் செயலி செயலிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை சீர்செய்யும் நடவடிக்கை விரைவாக நடைபெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.