ஒபரேஷன் எபிக் பியூரி பெரும் வெற்றி! அமெரிக்கா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
ட்ரம்ப் நிர்வாகம் திட்டமிட்டிருந்த நான்கு முதல் ஆறு வார காலக்கெடுவிற்குள்ளேயே 'ஒபரேஷன் எபிக் பியூரி' (Operation Epic Fury) இலக்குகளை எட்டி, பெரும் வெற்றியைப் பெற்றுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
இந்த இராணுவ நடவடிக்கையின் முக்கிய நோக்கங்கள் மிக விரைவாகவும் வெற்றிகரமாகவும் நிறைவேற்றப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லெவிட் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
அடுத்தகட்டம்
அதன்போது, ஈரானின் அணுசக்தித் திட்டம் முடக்கப்பட்டுள்ளதாகவும், அந்நாட்டின் கடற்படைத் திறன்கள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளதாகவும் ஈரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் திட்டங்கள் சிதைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Image Credit: Deacon Greg Kandra
இந்த நிலையில், இராணுவ நடவடிக்கை முடிவுக்கு வந்துள்ள நிலையில், அடுத்தகட்டமாகத் தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய முன்மொழிவு
தற்போதைய போர்நிறுத்தச் சூழலை, ஈரானிடமிருந்து ஒரு நடைமுறைக்குச் சாத்தியமான தீர்வைப் பெறுவதற்கான ஒரு நல்வாய்ப்பாக ட்ரம்ப் நிர்வாகம் கருதுகிறது.

இதன்படி, ட்ரம்பின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, ஈரான் தரப்பிலிருந்து ஒரு மாற்றியமைக்கப்பட்ட புதிய முன்மொழிவு வழங்கப்பட்டுள்ளதாக லெவிட் உறுதிப்படுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |