வவுனியா செக்கடிப்புளவில் கத்திக்குத்துக்கு இலக்கான பெண் மரணம்
வவுனியா - சொக்கடிப்புளவு பிரதேசத்தில் பெண் ஒருவர் கத்தி குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று(08.04.2026) இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் கத்திக்குத்துக்கு இலக்கான பெண் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அங்கே மரணம் அடைந்துள்ளார்.
காவல்துறை விசாரணை
சம்பவம் தொடர்பில் தெரிய வருகைளில்,
செக்கடிப்புளவில் வசித்து வந்த பவளரத்தினம் செல்வமலர் வயது 56 என்ற பெண் மீது அவரது சகோதர முறையானவர் மது போதையில் கத்தியால் குத்தியதில் படுகாயம் அடைந்துள்ளார்.

இதன்போது அங்கிருந்தவர்களின் உதவியுடன் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் குறித்த சம்பவத்தின் சந்தேக நபர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதோடு குற்றம் இடம்பெற்ற இடத்தில் பூவரசங்குளம் காவல்துறையால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |