கொழும்பில் விபத்தில் சிக்கி ஒரு வயது குழந்தை பலி!
Sri Lanka Police
Colombo
Sri Lanka Police Investigation
By Thulsi
கொழும்பில் (Colombo) இடம்பெற்ற விபத்தில் பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக கொட்டாஞ்சேனை காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த விபத்து கொட்டாஞ்சேனை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்று (22) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்த ஒரு வயதுடைய பெண் குழந்தையே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணை
இந்த விபத்து செலுத்துனரின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் ஒன்று பாரஊர்தியுடன் மோதியதில் இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் குழந்தை ஒன்று படுகாயமடைந்துள்ள நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொட்டாஞ்சேனை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்