மாத்தளையில் சகோதரிகளின் கணவர்களால் சிறுமிக்கு நேர்ந்த கதி : ஒருவர் தப்பியோட்டம்
மாத்தளை (Matale) பிரதேசத்தில் 12 வயது சிறுமி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இரண்டு சகோதரிகளின் கணவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர் நேற்று (3) மாத்தளை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, சிறுமியின் தந்தையின் முதல் மனைவிக்கு பிறந்த இரண்டு சகோதரிகளின் கணவர்களினால் இந்த சிறுமி தகாத முறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக மாத்தளை காவல்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சந்தேகநபர் தப்பியோட்டம்
இதனையடுத்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், குறித்த சிறுமி தனது சகோதரிகளின் இரண்டு கணவர்களினால் 12 தடவைகள் தகாத முறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்தநிலையில், சந்தேக நபர்களான சிறுமியின் இரண்டு சகோதரிகளின் கணவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மற்றையவர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றில் முன்னிலை
இதனையடு்த்து கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மாத்தளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக மாத்தளை பொது வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ நிலம் உள்ளவரை நித்தியப்புன்னகை அழகனின் குரல் தீராது! 2 நாட்கள் முன்