எங்கே எக்னெலிகொட..! 13 வருட போராட்டம்

Sri Lankan Peoples Sri Lankan political crisis
By Kiruththikan Jan 25, 2023 04:07 AM GMT
Kiruththikan

Kiruththikan

in சமூகம்
Report

2010 ஜனவரி 24ஆம் திகதியன்று இலங்கையில் அதிபர் தேர்தலுக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் பலவந்தமாக காணாமல் ஆக செய்யப்பட்ட, ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட தொடர்பில் இதுவரை யாரும் பொறுப்புக்கூறவில்லை என்று சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது.

அவர் காணாமல் போகச்செய்யப்பட்டு 13 வருடங்கள் கடந்துள்ளன. இந்த நிலையில் விசாரணைகள் குறைந்தபட்சம் உயர் அதிகாரிகளின் உத்தரவுகளை நிறைவேற்றியவர்களில் சிலரை வெளிப்படுத்தினாலும், நீதி மழுப்பலாகவே உள்ளது என்று மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது.

பிரகீத்தின் மனைவி சந்தியா எக்னலிகொட இந்த வழக்கின் சார்பாக தொடர்ந்து ஆவேசமாக வாதிட்டார், ஆனால் இன்றுவரை எந்த குற்றவாளியும் பொறுப்புக் கூறப்படவில்லை என்றும் மன்னிப்பு சபை சுட்டிக்காட்டியுள்ளது.

மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் விண்ணப்பம்

எங்கே எக்னெலிகொட..! 13 வருட போராட்டம் | 13 Years Of Ongoing Struggle For Justice

2010 ஆம் ஆண்டு, பிரகீத் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்ட பிறகு, சந்தியா தனது கணவரைப் பற்றிய தகவல்களைக் கோரி அவரை விடுவிக்குமாறு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஒரு விண்ணப்பத்தை தாக்கல் செய்தார்.

2015 ஆம் ஆண்டு பிரகீத்தின் வழக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டபோது, படைத்தரப்பைச் சேர்ந்த 12 பேர் சந்தேக நபர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

அத்துடன் 2015 ஆம் ஆண்டு காவல்துறையினரின் விசாரணையில் பிரகீத், இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் கடத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே, கிரிதலையில் உள்ள இராணுவ முகாமில் உயிருடன் இருந்தார் என்பது தெரியவந்தது.

படைவீரர்கள், முன்னாள் வீரர்கள் மற்றும் இராணுவ புலனாய்வு அதிகாரிகள் அனைவரிடமும் அவர் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டமை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் எவரும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.

இலங்கை இராணுவம் பலமுறை எந்தவொரு விசாரணைக்கும் ஆதரவளிக்கத் தவறியதுடன், அதற்குப் பதிலாக பிரகீத்தின் நிலை பற்றிய தகவல்களைத் தடுத்து நிறுத்துவதற்காக, தேசியப் பாதுகாப்பு பிரச்சினைகளை ஒரு காரணமாகக் குறிப்பிட்டு வந்தது.

ஊழல் மற்றும் மோசடி

எங்கே எக்னெலிகொட..! 13 வருட போராட்டம் | 13 Years Of Ongoing Struggle For Justice

பிரகீத் ஒரு ஊடகவியலாளர் மற்றும் கேலிச்சித்திரத் துறையை சேர்ந்தவர் என்ற அவரது பணி தொடர்பாக மட்டும் குறிவைக்கப்படவில்லை. ஊழல் மற்றும் மோசடி செய்பவர்கள் என்று கருதும் நாட்டில் உள்ள அரசியல்வாதிகளை பகிரங்கமாக விமர்சித்தமையாலும், அவர் குறிவைக்கப்பட்டார்.

எதிர்ப்பை மௌனமாக்குவதற்கும் எதிர்ப்பை அடக்குவதற்கும் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களை ஒரு கருவியாகப் பயன்படுத்திய நீண்ட வரலாற்றை இலங்கை அதிகாரிகள் கொண்டுள்ளனர்.

வலுக்கட்டாயமாக அல்லது தன்னிச்சையாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஐக்கிய நாடுகள் செயற்குழுவின் முன் நிலுவையில் உள்ள விசாரணைகளின் பட்டியலில், இலங்கை உலகில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

1980 களில் இருந்து நாட்டில் 60,000 முதல் 100,000 வரை பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இதில் தெற்கில் இளைஞர் எழுச்சிகளிலும் வடக்கில் உள்நாட்டுப் போரிலும் பங்குபற்றியர்வர்களும் அடங்குவர்.

பிரகீத்தை கடைசியாகப் பார்த்த நாள், அவர் அணிந்திருந்த உடைகள் உட்பட ஒவ்வொரு விபரமும் சந்தியாவுக்கு நினைவிருக்கிறது. அவர், தமது மூத்த மகனிடமிருந்து ஒரு வெள்ளை சட்டையை கடன் வாங்கினார், விரைவில் வீட்டிற்கு வருவேன் என்று உறுதியளித்தார்.

எனினும் இன்னும் சந்தியாவும் அவரது இரண்டு மகன்களும் பிரகீத் வருகைக்காக 13 வருடங்கள் காத்திருக்கின்றனர். நீதி கிடைக்கவில்லை. இடைப்பட்ட ஆண்டுகளில், சந்தியா மிரட்டப்பட்டு, அச்சுறுத்தப்பட்டு துன்புறுத்தப்பட்டார். எனினும் நீதிமன்றங்களிலும், நேரில் மற்றும் சமூக ஊடகங்களில் உண்மையையும் நீதியையும் கோருவதற்காக. அவர் பிடிவாதமாக உள்ளார்.

சர்வதேச உடன்படிக்கை

எங்கே எக்னெலிகொட..! 13 வருட போராட்டம் | 13 Years Of Ongoing Struggle For Justice

2016 ஆம் ஆண்டில் அனைவரையும் பலவந்தமாக காணாமல் ஆக்கப்படுவதிலிருந்து பாதுகாப்பதற்கான சர்வதேச உடன்படிக்கையை இலங்கை அங்கீகரித்துள்ளது. எனினும், பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள், முழுமையான இழப்பின் உணர்வோடு திகைத்து நிற்கின்றன.

2016 ஆம் ஆண்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனவின் அரசாங்கம் 65,000 இற்கும் மேற்பட்ட காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு "காணக்கிடைக்கவில்லை சான்றிதழ்" வழங்க ஆரம்பித்ததுடன், காணாமல் போனவர்களின் சொத்துக்களை தற்காலிகமாக நிர்வகிப்பதற்கும், இறப்புச் சான்றிதழை ஏற்றுக்கொள்ளாமல் அரசாங்க நலன்புரி திட்டங்களுக்கு விண்ணப்பிக்கவும் அனுமதித்தது.

2015 இல் இலங்கையில் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களை விசாரிக்கும் அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டது. அது, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட 10,000 பேரின் பட்டியலை வெளியிட்ட போதிலும், வடக்கில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நம்பிக்கையைப் பெறுவதுடன் மட்டுமல்லாமல், இந்த வழக்குகள் தொடர்பான விசாரணைகளை திறம்பட மேற்கொள்ளவும் அது தவறிவிட்டது என்று சர்வதேச மன்னிப்பு சபை குறிப்பிட்டுள்ளது.

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், London, United Kingdom, Bochum, Germany, Brampton, Canada

23 Apr, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Bremen, Germany

23 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், கோண்டாவில், Mississauga, Canada

22 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vancouver, United States

19 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரிப்பட்டமுறிப்பு, கற்சிலைமடு

21 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உரும்பிராய், London, United Kingdom, Toronto, Canada

25 Apr, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உரும்பிராய்

24 Apr, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம் மேற்கு, London, United Kingdom

21 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா, போரூர், India

19 Apr, 2014
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, துணுக்காய், மல்லாவி

24 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், மதுரை, தமிழ்நாடு, India

25 Mar, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா

26 Apr, 2014
மரண அறிவித்தல்

கரவெட்டி, Surrey, United Kingdom

24 Apr, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு

21 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், சாவகச்சேரி, கொழும்பு

22 Apr, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை, மாத்தளை, Scarborough, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சூரிச், Switzerland, கனடா, Canada

06 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Chevilly Larue, France

07 May, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, மெல்போன், Australia

21 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021