2 நாட்களாக கடலில் தத்தளித்த 15 வயது சிறுவன்: அமெரிக்க படையின் நடவடிக்கை
அமெரிக்காவின் அலாஸ்கா அருகில் உள்ள பெரிங் கடலில் படகு ஒன்று கவிழ்ந்த நிலையில், 2 நாட்களாக கடலில் தத்தளித்த 15வயது சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.
செயிண்ட லாரன்ஸ் தீவில் உள்ள சவோங்கா கிராமத்தை சேர்ந்த டெரெக் பார்க்கர் அக்னாங்கா என்ற 15 வயது சிறுவன் படகில் உறவினர்களுடன் மீன்பிடிக்க சென்ற போது அவரது படகு எதிர்பாராத விதமாக கடலில் கவிழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கடலில் நீரின் வெப்பநிலையானது வெறும் 10 செல்சியஸ் மட்டுமே இருந்த நிலையில், கவிழ்ந்த படகை இறுக்கமாக பிடித்துக் கொண்டு இரவு பகலாக உயிருக்கு போராடியுள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
3 பேர் மாயம்
கடலுக்கு சென்ற 3 பேரை காணவில்லை என உள்ளூர் மக்கள் தகவல் தெரிவித்ததும், அமெரிக்க கடலோரக் காவல்படை தீவிர தேடுதல் மற்றும் மீட்பு பணிகளை துரிதப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் சிறுவனுடன் சென்ற மற்ற இரண்டு பேர் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடலில் உயிருக்காக 2 நாட்களாக போராடிய சிறுவன் சுமார் 2 நாட்களுக்கு பிறகு செயிண்ட் லாரன்ஸ் தீவுக்கு அருகே மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |