லண்டனில் மர்ம நபர் நடத்திய கத்திக் குத்து தாக்குதல்: சிறுவன் பலி
வடக்கு லண்டன் (London) பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 15 வயதான சிறுவன் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தைப் பார்த்தவர்கள் அல்லது ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள், தயவு செய்து எங்களைத் தொடர்பு கொள்ளுமாறு விசாரணைகளை முன்னெடுத்துள்ள தலைமை கண்காணிப்பாளர் ஜேசன் ஸ்டீவர்ட் தெரிவித்துள்ளார்.
இந்த கத்திக்குத்து சம்பவம் நேற்று (10.12.2025) செவ்வாய்க்கிழமை மதியம் ஒரு மணியளவில் இஸ்லிங்டனில் உள்ள செயிண்ட் மேரி மாக்டலீன் பாடசாலைக்கு அருகில் நடந்துள்ளது.
அவசர விசாரணை
இஸ்லிங்டனில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு அருகில் வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், பிரதான சந்தேகநபர் தலைமறைவாக இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வடக்கு லண்டனில் உள்ள வெஸ்ட்போர்ன் வீதியில் கத்திக்குத்து சம்பவம் நடந்ததாக தகவல் கிடைத்ததை அடுத்து, மெட்ரோ காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து அதிகாரிகள் அவசர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |