ஓமான் சென்ற இலங்கையர்களுக்கு நேர்ந்த அவலம்
ஓமானில் பணிபுரியும் போது பல்வேறு துன்புறுத்தல்களுக்குள்ளாகி, இலங்கைத் தூதரகத்தின் பாதுகாப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 16 வீட்டுப் பணிப் பெண்கள் நாடு திரும்பியுள்ளனர்.
பாலியல் துன்புறுத்தல், தாக்குதல், தீக்காயங்கள் மற்றும் முதலாளிகளால் ஊதியம் வழங்கப்படாததால், ஓமானில் வேலை செய்யும் இடத்திலிருந்து தப்பி ஓடியதாகவும், பின்னர் ஓமானில் உள்ள இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பை நாடியதாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த பெண்கள் இரத்தினபுரி, பதுளை, கண்டி, குருநாகல், சிலாபம், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் என தெரியவந்துள்ளது.
துஷ்பிரயோகத்திற்கு உள்ளான மேலும் 26 வீட்டுப் பணிப் பெண்கள் இன்னும் ஓமானில் உள்ள பாதுகாப்பு மையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தற்காலிக கடவுச்சீட்டு மூலம் மாத இறுதிக்குள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.