இந்திய கடற்தொழிலாளர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவு
தலைமன்னார் (Talaimannar) கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 17 இந்திய கடற்தொழிலாளர்களையும் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் (Mannar) நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த இந்திய கடற்தொழிலாளர்களை இன்று (29) மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போதே நீதவான் இந்த உத்தரவினைப் பிறப்பித்துள்ளார்.
விளக்கமறியல்
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 17 இந்திய கடற்தொழிலாளர்கள் இன்று (29) மாலை தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த 17 கடற்றொழிலாளர்களும் இன்று மாலை மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த கடற்தொழிலாளர்களை எதிர்வரும்10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |