சாதாரண தர செயன்முறைப் பரீட்சைகள் ஓகஸ்ட் 2 இல் ஆரம்பம்
2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளின் செயன்முறைப் பரீட்சைகள் ஓகஸ்ட் மாதம் 02 ஆம் திகதி முதல் நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இசை, நடனம் மற்றும் நாடகம் அரங்கியலும் ஆகிய பாடங்களுக்கான செயன்முறைப் பரீட்சைகள் ஓகஸ்ட் 12 ஆம் திகதி வரை நடத்தப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

மேற்கத்திய இசை தொடர்பான செயன்முறைப் பரீட்சை ஓகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என ஜயசுந்தர மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த வருடங்களில் செயன்முறைப் பரீட்சைகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட மதிப்பீட்டு முறைகளில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை எனத் தெரிவித்த ஜயசுந்தர, இந்த வருடமும் அதே தரநிலைகள் பயன்படுத்தப்படும் என்றார்.
பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரிகளின் பரீட்சை அனுமதி அட்டைகள் விரைவில் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளின் செயன்முறைப் பரீட்சைகள் தொடர்பான முறைப்பாடுகள் மற்றும் மேலதிக தகவல்களுக்கு பரீட்சை திணைக்களத்தின் அவசர தொலைபேசி இலக்கமான 1911 அல்லது 011 2 784208, 011 2 784537 அல்லது 011 2 786616 ஊடாக தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.