நாடு முழுவதும் பதிவாகிய மின் தடைகள்: தொடரும் சீரற்ற வானிலை!
Power cut Sri Lanka
Sri Lankan Peoples
Power Cut Today
Climate Change
By Dilakshan
நிலவும் பாதகமான வானிலை காரணமாக நாடு முழுவதும் 29,015 மின் தடைகள் பதிவாகியுள்ளன.
அதன்படி, மின்சார விநியோகத்தை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
பாதிப்புகள்
இதற்கிடையில், கொழும்பு மாவட்டத்தில் 245 குடும்பங்களைச் சேர்ந்த 1,321 பேர் கனமழை , பலத்த காற்று மற்றும் மின்னலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு மற்றும் ஹோமாகம பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட பேரிடர் மேலாண்மை பிரிவு தெரிவித்துள்ளது.
நிலச்சரிவு அபாயம்
மேலும், குறித்த பகுதியில் 03 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும், 239 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், நுவரெலியா - சோமர்செட் - லேண்டல் வத்த பகுதியில் நிலச்சரிவு அபாயம் காரணமாக 28 குடும்பங்களைச் சேர்ந்த 120 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

10ம் ஆண்டு நினைவஞ்சலி