சந்தேகத்துக்கிடமாக நடமாடிய 3 பேர் மடக்கிப் பிடிப்பு - இருவர் தப்பியோட்டம்
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி காவல்துறை பிரிவிலுள்ள குருக்கள்மடம் பிரதேசத்தில் சந்தேகத்துக்கிடமாக நடாடிய 3 இளைஞர்களை பொதுமக்கள் சுற்றிவளைத்தபோது இருவர் தப்பியோடிய நிலையில் ஏறாவூரைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை மடக்கிபிடித்து காவல்துறையில் ஒப்படைத்த சம்பவம் நேற்று புதன்கிழமை (17) மாலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
களுவாஞ்சிக்குடி மட்டக்களப்பு பிரதான வீதி குருக்கள்மடம் வீதி வளைவை அண்மித்த பகுதியில் நேற்று பிற்பகல் 2 மணிக்கு சந்தேகத்துக்கு இடமாக 3 இளைஞர்கள் நடமாடிக் கொண்டிருப்பதை அந்தபகுதி மக்கள் அவதானித்த நிலையில் அவர்கள் சிறுவர்களை கடத்தும் கும்பல் என அவர்களை சுற்றி வளைத்தனர்.
இதன் போது அங்கிருந்த இரு இளைஞர்கள் தப்பியோடியதையடுத்து அதில் ஒருவரை பொதுமக்கள் மடக்கிபிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்ததையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவர் ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் இவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்
