அர்ச்சுனாவின் நாடாளுமன்ற பதவி விவகாரம்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் அர்ச்சுனா இராமநாதன் தொடரத் தகுதியுடையவரா என்பதை சவால் செய்யும் Quo Warranto மனு தொடர்பான வாதங்களை விசாரிக்க 2026 ஒகஸ்ட் 31 ஆம் திகதியை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.
இவ்வழக்கு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதிலும், நீதியரசர்கள் அமர்வு முறையாக அமைக்கப்படாத காரணத்தால் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த மனுவை அபிநவ நிவஹல் பெரமுன கட்சியின் தலைவர் ஓஷல ஹேரத் தாக்கல் செய்துள்ளார்.
அர்ச்சுனாவின் எம்.பி பதவி
அவரது மனுவில், நடைபெற்ற பொதுத் தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்த போது, எம்.பி. அர்ச்சுனா இராமநாதன் இன்னும் அரசாங்க மருத்துவ அதிகாரியாக பணியாற்றிக் கொண்டிருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசுப் பணியிலிருந்து முறையாக பதவி விலகல் செய்யாமல் வேட்புமனு தாக்கல் செய்தது நாடாளுமன்றத் தேர்தல் சட்டத்தை மீறுவதாக மனுதாரர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி அர்ச்சுனா இராமநாதன் சட்டபூர்வமாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்கத் தகுதியற்றவர் என நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
மனுதாரர் தரப்பின் சட்டத்தரணி வழக்கை விரைவாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கோரியதைத் தொடர்ந்து, மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒகஸ்ட் 31 ஆம் திகதி வாதங்களை விசாரிக்கத் தீர்மானித்துள்ளது.
விசாரணை நடவடிக்கை
அந்த வழக்கை அன்றைய பட்டியலில் முதலிடத்தில் சேர்த்துள்ளது.
மனுதாரர் சார்பில் சட்டத்தரணி என்.கே. அசோக் பரன், அவருடன் ஷெனால் பெர்னாண்டோ முன்னிலையாகியுள்ளார்.
மேலும், எம்.பி. அர்ச்சுனா இராமநாதன் சார்பில் சட்டத்தரணி சேனானி தயாரத்ன, அவருடன் நிஷாதி விக்கிரமசிங்க ஆகியோர் முன்னிலையாகியுள்ளனர்.
மேலும், அரசுத் தரப்பினருக்காக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மனோஹர ஜயசிங்க நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
2 நாட்கள் முன்