24 மணிநேரத்தில் 1217 டெங்கு நோயாளர்கள்: வெளியாகிய அதிர்ச்சி அறிக்கை
கடந்த 24 மணித்தியாலங்களில் புதிதாக 1,217 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், நாட்டில் இதுவரை பதிவாகியுள்ள ஒட்டுமொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 55,406 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த ஜூன் மாத காலப்பகுதிக்குள் மாத்திரம் 21,565 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், இந்நிலைமை இன்னமும் அபாயகரமான மட்டத்திலேயே நீடிப்பதாகவும் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பதில் பணிப்பாளர் மருத்துவர் கபில கன்னங்கர விடுத்த எச்சரிக்கையிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
டெங்கு நோய்
டெங்கு நோய் காரணமாக இந்த வருடத்தில் இதுவரை 32 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் மருத்துவர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.

வழமைப் போன்றே மேல் மாகாணத்திலேயே அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். மொத்த நோயாளர்களில் 52.5 சதவீதமானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாவர்.
கொழும்பு மாவட்டத்தில் 11,392 நோயாளர்களும், கம்பஹா மாவட்டத்தில் 11 006 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர். இந்த இரு மாவட்டங்களுமே டெங்கு பரவலில் முதன்மையாக உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளின்படி, வீடுகள், பொது நிறுவனங்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சூழலில் இன்னும் நுளம்புகள் பெருகும் இடங்கள் அப்படியே காணப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
தற்போதைய சூழலில் நுளம்புகளிடையே டெங்கு வைரஸ் வகை 2 மற்றும் வகை 3 (Denv-2 & Denv-3) பரவியுள்ளதால், நுளம்பு கடிக்கு உள்ளாகுபவர்கள் எளிதில் பாதிக்கப்படுவதாக அவர் விளக்கமளித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
3 நாட்கள் முன்