கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பில் இருந்த நடிகைகள் : காவல்துறை எடுக்கப்போகும் நடவடிக்கை
குற்றப் புலனாய்வுத் துறை நடத்திய விசாரணையில், சுமார் 05 நடிகைகள் மற்றும் மொடல் நடிகைகள் கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பு கொண்டிருந்ததாக தெரியவந்துள்ளது. கெஹல்பத்தர பத்மேவின் கைபேசியை பகுப்பாய்வு செய்ததில், அவர்களுக்கு கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பு இருந்தமை தெரியவந்துள்ளது.
கெஹல்பத்தர பத்மே அந்த மொடல் கலைஞர்கள் மற்றும் நடிகைகள் துபாய் சென்றபோது பல சந்தர்ப்பங்களில் அவர்களுடன் தங்கியிருந்து புகைப்படம் எடுத்ததாகவும், அந்த புகைப்படங்கள் கெஹல்பத்தர பத்மேவின் கைபேசியில் காணப்பட்டதாகவும் குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.
விசாரணை வளையத்துள் நடிகைகள்
அதன்படி, குற்றப் புலனாய்வுத் துறை நடிகை பியூமி ஹன்சமாலியிடம் விசாரித்து அவரது வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது.எதிர்காலத்தில் இது தொடர்பாக பல நடிகைகளும் விசாரிக்கப்பட உள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.
குற்றப் புலனாய்வுத் துறையின் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு, கெஹெல்பத்தர பத்மேவுக்குச் சொந்தமான 06 கபானாக்கள் கொண்ட ஒரு நிலத்தையும், உடுகம்பொலவில் உள்ள மற்றொரு நிலத்தையும் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.
கெஹல்பத்தர பத்மேவின் சொத்துகள் பறிமுதல்
இந்த சொத்துக்களின் மதிப்பு ரூ. 50 லட்சம் என்று அந்தப் பிரிவு கூறுகிறது. போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தில் இந்த சொத்துக்கள் வாங்கப்பட்டதாகத் தோன்றுவதால், அவற்றை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


செஞ்சோலை… ஈழக் குழந்தைகளுக்காய் தலைவர் கட்டிய கூடு 2 மணி நேரம் முன்
