ஒரு பாடசாலையும் மூடப்படாது! கல்வி அமைச்சரின் அறிவிப்பு
ஒரு பாடசாலையும் மூடப்படாது என்றும், தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை பாடசாலைகளை ஒருங்கிணைத்து மேம்படுத்துவதாகும் என்று கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கல்வி சீர்திருத்தம் தொடர்பான நாடாளுமன்ற துணைக்குழுவின் கூட்டத்தில் பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பாடத்திட்டம்
அத்துடன், கல்வி முறையின் தரத்தை மேம்படுத்துவதையும் அனைவருக்கும் சம வாய்ப்புகளை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டு இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, 2026 ஆம் ஆண்டு முதல் நாடு தழுவிய அளவில் அனைத்து பாலர் பாடசாலைகளுக்கும் ஒரே பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் பிரதமர் அமரசூரிய குறிப்பிட்டுள்ளார்.
ஆசிரியர்களுக்கு பயிற்சி
பிள்ளைப் பருவ பாடத்திட்ட கட்டமைப்பு ஏற்கனவே இறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், சுமார் 19,000 பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் அதிகாரிகளுக்கான பயிற்சித் திட்டம் நவம்பர் 25 ஆம் திகதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
புதிய பாடத்திட்டத்துடன் இணைக்கப்பட்ட கற்பித்தல் நடைமுறைகளை செயல்படுத்துவதற்கு உதவும் வகையில், ஒவ்வொரு மாகாணத்திலும் பயிற்சி அமர்வுகள் நடத்தப்படும் எனவும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
