மொரகஹகந்த நீர்த்தேக்கத்தை அண்மித்து தோட்டாக்கள் மீட்பு!
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Law and Order
By Kanooshiya
மாத்தளை- மொரகஹகந்த நீர்த்தேக்கத்தை அண்மித்து T-56 ரக துப்பாக்கி தோட்டாக்கள் உள்ளிட்ட 715 தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மொரகஹகந்த நீர்த்தேக்கத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று(12.10.2025) விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட நிலையில் குறித்த தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன.
காவல்துறைக்கு தகவல்
கடற்றொழிலாளர் ஒருவரால் வழங்கப்பட்ட தகவலையடுத்து இந்த தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன.
அதன்படி, குறித்த நீர்த்தேக்கத்தை அண்மித்துள்ள பகுதியிலிருந்து நேற்று (11.10.2025) ஒரு தொகை தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டதையடுத்து இன்று விசேட சோதனை நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டது.
நேற்று (11.10.2025) குறித்த பகுதியிலிருந்து பல்வேறு வகையான 448 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

5ம் ஆண்டு நினைவஞ்சலி