பிரபல ஹோட்டலொன்றில் கைதான பெண்
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவினர் கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த ஐந்து இளைஞர்களிடம் 5 ரூபாவை மோசடி செய்ததாக தெரிவித்து கொலன்னாவை பிரதேசத்தில் வசிக்கும் பெண் ஒருவரை பத்தரமுல்லையில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போது, கைது செய்துள்ளனர்.
இது தொடர்பான பண மோசடியில் சிக்கிய இளைஞர்கள் குழு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவுக்கு அனுப்பிய முறைப்பாட்டின் பிரகாரம் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
ருமேனியாவில் வேலைவாய்ப்பு
குறித்த பெண் ருமேனியாவில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் மாதாந்தம் இரண்டு இலட்சத்து எழுபத்தைந்தாயிரம் ரூபா சம்பளத்திற்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி இளைஞர்களிடம் மோசடி செய்துள்ளார்.
நான்கு மாதங்களாக பணத்தை பெற்றுக் கொண்ட பெண் ஏமாற்றி வருவதாகவும் அது மோசடி என்பதை உணர்ந்து முறைப்பாடு செய்ததாகவும் மோசடியில் சிக்கிய இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
கடவுச்சீட்டுகள் மற்றும் சான்றிதழ்கள் மறைப்பு
மேலும், குறித்த இளைஞர்களின் கடவுச்சீட்டுகள் மற்றும் சான்றிதழ்களை சம்பந்தப்பட்ட பெண் எடுத்துச் சென்றதாகவும், அவற்றை மறைத்து தங்களுக்கு வழங்குவதை தவிர்த்து வருவதாகவும் குறித்த இளைஞர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
அதன்படி,நடத்தப்பட்ட விசாரணையில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் உரிமம் இன்றி, தொழிலாளர்களை வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பும் உரிமம் இன்றி, பெண் இந்த பண மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவரை, தனி காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்துனில் பூஷிபகுமார, ரவீந்திர அபேபால உள்ளிட்ட அதிகாரிகள் குழுவொன்று இந்த சோதனையில் கலந்துகொண்டது.
