நாடாளுமன்ற உறுப்பினர்களின் வெளிநாட்டு பயணங்கள் ரத்து
நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று தங்களது வெளிநாட்டு பயணங்களை ரத்து செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு தேவைகளுக்கு வெளிநாடுகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் தமது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளனர்.
பிரசார நடவடிக்கை
குறித்த அறிவிப்பானது, தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு அதிகபட்ச பங்களிப்பை வழங்கும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

மேலும், அடுத்த வாரம் நாடாளுமன்ற கூட்டங்களும் ஒரு நாளுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 21ஆம் திகதி மாத்திரம் நாடாளுமன்ற கூட்டங்கள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நோக்கம்
அதன் படி, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கிராமங்களில் தங்கி தேர்தல் பிரசார நிகழ்ச்சிகளில் முடிந்தவரை பங்களிக்க வேண்டும் என்றும் கட்சித் தலைவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
3 நாட்கள் முன்