இலங்கை அரசியலுக்குள் உள்நுழைந்த புதிய கட்சி!
நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஐக்கிய குடியரசு முன்னணி என்ற புதிய அரசியல் கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று (22) மஹரகம தேசிய இளைஞர் கழக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதிகளாக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கனேசன் உட்பட முக்கிய தரப்பினர் பலர் கலந்துகொண்டனர்.
ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, ’43ஆவது படையணி’ என்பதை ஆரம்பித்து செயற்பாட்டு ரீதியான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.
ஐக்கிய குடியரசு முன்னணி
இந்த நிலையில், எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள தேர்தல்களில் ஐக்கிய குடியரசு முன்னணி கட்சியை முன்னிலைப்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கபோட்டியிடுவார் என அரசியல் களத்தில் குறிப்பிடப்படுகிறது.
