யாழில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருட்கள் மீட்பு
Jaffna
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Shalini Balachandran
யாழ்ப்பாணம் (Jaffna) பருத்தித்துறை புலோலி காட்டுப் பகுதியில் மறைத்து வைத்திருந்த ஒரு தொகை போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த போதைபொருட்களானது இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்றைய தினம் (03) மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
இதன்போது ஒரு கிலோ எடையுடைய கேரளக் கஞ்சா, 290 போதை மாத்திரைகள் மற்றும் தராசு ஒன்று என்பன மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன் பருத்தித்துறை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![](https://cdn.ibcstack.com/bucket/63039cb22bd37.webp)
![இராஜவரோதயம் சம்பந்தன் மரணம் யாரையும் மன்னிப்பதில்லை !](https://cdn.ibcstack.com/article/4a541f45-4b6b-46cc-8bfc-da43b80fd749/24-6682dbaba3ee0-md.webp)
இராஜவரோதயம் சம்பந்தன் மரணம் யாரையும் மன்னிப்பதில்லை ! 2 நாட்கள் முன்
![அகதியாய் இருக்கும் துயரம் உலகில் எவருக்கும் வேண்டாம்…](https://cdn.ibcstack.com/article/8170aadf-e519-44c1-8849-b5aa88b7da2a/24-66736d16968e6-sm.webp)
அகதியாய் இருக்கும் துயரம் உலகில் எவருக்கும் வேண்டாம்…
2 வாரங்கள் முன்
மரண அறிவித்தல்