கடமையில் இருந்த போக்குவரத்து பொலிஸாருக்கு நேர்ந்த கதி! வாகன சாரதி கைது
accident
police
amparai
By Vanan
கடமையில் ஈடுபட்ட போக்குவரத்து பொலிஸார் மீது வேகமாக வந்த கப் ரக வாகனம் மோதியதில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் வாகன சாரதி கைதாகியுள்ளார்.
இச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை(7) மாலை அம்பாறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்டல மகா விஹாரைக்கு அண்மையில் இடம்பெற்றுள்ளதுடன், கப் வாகனம் மோதியதில் பொலிஸாரின் 600 சிசி மோட்டார் சைக்கிள் கடுமையாக சேதமடைந்துள்ளது.
குறித்த விபத்தில் அம்பாறை பொலிஸ் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி காயமடைந்துள்ளதுடன் இவ்விபத்தினை ஏற்படுத்திய வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
காயமடைந்த போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகிய இருவரும் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.