பயணிகள் மீது மோதிய கப் வாகனம்- சம்பவ இடத்தில் ஒருவர் பலி..!
பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக தனியார் பேருந்து ஒன்று நிறுத்தப்பட்ட போது, அதன் பின்னால் அதிவேகமாக வந்த கப் ரக வாகனம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.
அனுராதபுரத்திலிருந்து களுத்துறை நோக்கிச் செல்லும் பேருந்து ஒன்று அனுராதபுரம் பாதெனிய வீதியின் ஆரியகம சந்தியில் பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அப்போது, பேருந்துக்கு பின்பகுதியில் பயணிகள் தங்களது பொருட்களை ஏற்றிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது.
படுகாயமடைந்த பயணி
அப்போது, அதிவேகமாக வந்த கப் ரக வாகனம், பேருந்தின் பின்னால் சென்ற மூன்று பயணிகள் மீது மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் படுகாயமடைந்த பயணி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த ஏனைய இருவரும் தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட கப் ரக வாகன சாரதி தம்புத்தேகம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
