திருகோணமலையில் இன்றுமாலை பாரிய விபத்து : பலர் படுகாயம்
Trincomalee
Sri Lanka Police Investigation
Accident
By H. A. Roshan
திருகோணமலை -கிண்ணியா காவல்துறை பிரிவிலுள்ள கங்கை பாலத்தருகில் வைத்து மரமொன்றுடன் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 23 பேர் படுகாயமடைந்து மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் இன்று புதன்கிழமை (22) மாலை இடம்பெற்றுள்ளது.
மரமொன்றுடன் மோதி விபத்து
திருகோணமலையிலிருந்து மூதூர் நோக்கி பயணித்த தனியார் பேருந்து பாதையைவிட்டு விலகி மரமொன்றுடன் மோதியதிலே இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது .

குறித்த விபத்து சம்பவத்தால் சில மணி நேரம் போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.மரத்துடன் தாழ் நிலப் பகுதியில் மோதுண்ட பேருந்தை டிப்பர் வாகனம் ஊடாக மீட்டுள்ளனர்.
கிண்ணியா காவல்துறை மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.


| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
2ம் ஆண்டு நினைவஞ்சலி