வகுப்புக்கு சென்ற 15 வயது மாணவனுக்கு ஏற்பட்ட அவலம்!
Accident
By pavan
கெக்கிராவ - எப்பாவல பிரதான வீதியின் மஹஇலுப்பள்ளம பகுதியில் ஏற்பட்ட விபத்தில் 15 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து சம்பவம் நேற்று (16) பிற்பகல் இடம்பெற்றதாக தெரிவித்துள்ளனர்.
மகாஇலுப்பள்ளம பிரதேசத்தில் இடம்பெற்ற பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு துவிச்சக்கரவண்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்த இவர் இந்த அசம்பாவித விபத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.
மேலதிக விசாரணை
மாணவன் பயணித்த துவிச்சக்கரவண்டியை மோதிய மகிழுந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தின் பின்னர், மாணவன் சேனாபுர பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் அதற்கு முன்னதாகவே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி